வடகொரியாவுக்கு எரிபொருள்: சிங்கப்பூர் நிறுவனம் மீது ஐநா குற்றச்சாட்டு

வடகொரியாவுக்கு எரிபொருள்: சிங்கப்பூர் நிறுவனம் மீது ஐநா குற்றச்சாட்டு

2 mins read
d8c2a6df-679a-4cf9-a9b3-d74e3ecc5180
-

சிங்­கப்­பூரை தள­மா­கக் கொண்ட எண்­ணெய் வர்த்­தக நிறு­வ­னம் ஒன்று அனைத்­து­லக நாடு­க­ளின் தடை­களை மீறி வட­கொ­ரி­யா­வுக்கு எரி­பொ­ருள் வழங்­கி­ய­தாக ஐக்­கிய நாடு­கள் சபை குற்­றம் சாட்­டி­யுள்­ளது.

ஐக்­கிய நாடு­கள் சபை­யின் அந்தக் குற்றச்சாட்டு குறித்த அறிக்­கையை போலிஸ் ஆராய்ந்து வரு­கிறது.

ஐ.நா. சபை­யின் தீர்­மா­னங்­களின் கீழ் சிங்­கப்­பூர், ஐநா­வின் குற்­றச்­சாட்­டைக் கடுமையாக நோக்கி, தனது கட­மை­க­ளைச் செவ்­வனே செய்து வரு­கிறது என்று போலிஸ் செய்­தித் தொடர்­பா­ளர் கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது.

"நிறு­வ­னங்­கள் சட்­டங்­களை மீறி­ய­தற்­கான ஆதா­ரங்­கள் கிடைத்­தால் அவர்­கள் மீது தகுந்த நட­வ­டிக்­கையை எடுக்க நாங்­கள் ஒரு­போ­தும் தயங்க மாட்­டோம்," என்று அந்­தப் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில், அந்­நி­று­வ­னத்­தின் பேச்­சா­ளர் ஒரு­வர் கூறு­கை­யில், எங்­கள் நிறு­வ­னத்தை போலிஸ் தொடர்­பு­கொள்­ள­வில்லை என்று கூறி­யுள்­ளார்.

சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த வின்­சன் குரூப் என்­னும் நிறு­வ­னம் வட­கொ­ரி­யா­வுக்கு சட்­ட­வி­ரோ­த­மாக எரி­பொ­ருள் வழங்கி வந்­த­தாக ஐக்­கிய நாடு­கள் மன்­றம் தனது 261 பக்க அறிக்­கை­யில் கூறி­யுள்­ளது.

சிங்­கப்­பூ­ர­ரான டோனி டங் என்­ப­வ­ரால் நிறு­வப்­பட்ட வின்­சன் குரூப் நிறு­வ­னம் குறித்து ஐநா இம்­மா­தத் தொடக்­கத்­தில் செப்­டம்­பர் 8 எனத் தேதி­யி­டப்­பட்ட அந்த அறிக்­கையை வெளி­யிட்­டது.

ஐநா அறிக்­கை­யில் கூறி­ய­படி சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­வதை வின்­சன் குரூப் மறுத்­துள்­ளது.

மேலும் அந்த அறிக்­கை­யில், மனி­த­நேய மேம்­பாடு மற்­றும் வட­கொ­ரி­யா­வின் கண்­டம் விட்­டுக் கண்­டாம் பாயும் ஏவு­க­ணைச் சோத­னை­கள் ஆகி­யவை குறித்­தும் கூறப்­பட்­டி­ருந்­த­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறி­யது.

வட­கொ­ரி­யா­வின் சட்­ட­வி­ரோத எரி­பொ­ருள் கொள்­மு­தல் நட­வ­டிக்­கை­களில் முக்­கி­ய­மான நிறு­வ­ன­மாக இருப்­பது வின்­சன் குரூப் நிறு­வ­ன­ம் என்று பல்­வேறு அமைப்­பு­களும் ஆய்­வு­க­ளும் கூறுவதை ஐநா அதன் அறிக்கையில் மேற்­கோள் காட்­டி­யுள்­ளது.

சில குற்­றச்­சாட்­டு­களில் உல­கம் முழு­தும் இருந்து வட­கொ­ரி­யா­வுக்கு எரி­பொ­ருள் வழங்­கும் நிறு­வ­னங்­கள் மற்­றும் தனிப்­பட்ட ஆட்­கள் ஆகி­யோ­ரி­டம் வின்­சன் நிறு­வ­னத்­திற்­குத் தொடர்பு இருப்­ப­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

ஆனால், இந்­தக் குற்­றச்­சாட்­டு­கள் அனைத்­தை­யும் வின்­சன் மறுத்து வரு­கிறது.

1998ல் சிங்­கப்­பூ­ரில் நிறு­வப்­பட்ட வின்­சன் நிறு­வ­னம் இப்­போது ராஃபிள்ஸ் ஒன் கட்­டத்­தில் இயங்கி வரு­கிறது. இந்­நி­று­வ­னத்­திற்கு ஹாங்­காங், தைவான், சீனா, துபாய் ஆகிய நாடு­களில் அலு­வ­ல­கங்­கள் உள்­ளன.

இந்த நிறு­வ­னம் அனைத்­து­லக எண்­ணெய் வர்த்­த­கம், எண்­ணெய்க் கிடங்­கு­கள் மற்­றும் முனை­ய­வ­ச­திச் சேவை­களை வழங்கி வரும் வர்த்­த­கத்­தில் ஈடு­பட்­டுள்­ளது.