18 மாத உயிரிழப்புகளை அக்டோபர் விஞ்சிவிட்டது

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொற்று கார­ண­மாக அக்­டோ­பர் மாதம் மட்­டும் 169 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். கடந்த 18 மாதங்­களில் கொரோ­னா­வால் நிகழ்ந்த மொத்த மர­ணங்­க­ளைக் காட்­டி­லும் அக்­டோ­பர் மாத எண்­ணிக்கை அதி­க­மாக உள்­ளது. இது, உரு­மா­றிய 'டெல்டா' கிரு­மி­யின் வீரி­யத்­தை­யும் தடுப்­பூசி போடா­தோ­ரி­டையே அது ஏற்­ப­டுத்­தி­வ­ரும் தாக்­கத்­தை­யும் காட்­டு­கிறது என்று மருத்­துவ நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

கடந்த ஆண்டு மார்ச் 21ஆம் தேதி­யன்று சிங்­கப்­பூ­ரில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் முதல் உயி­ரிழப்பு பதி­வா­னது. அன்­றைய நாளில் 75 வயது மூதாட்டி ஒரு­வர் கிரு­மித்­தொற்­றால் மாண்­டார். அன்று தொடங்கி, நேற்று முன்­தி­னம் வரை கொரோனா தொற்று கார­ண­மாக 264 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோரை ஒப்­பு­நோக்க, தடுப்­பூசி போடா­தோர், கொவிட்-19 தொற்­றால் உயி­ரி­ழக்­கும் வாய்ப்பு கிட்­டத்­தட்ட 8.5 மடங்கு அதி­கம் என்று இம்­மா­தப் புள்­ளி­வி­வ­ரங்­க­ளின் அடிப்­ப­டை­யில் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தாள் கூறு­கிறது.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­மல் கொரோனா கிருமி தொற்றி இறந்­தோ­ரின் விகி­தத்தை, இரு­முறை தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­பின் கிருமி தொற்றி மாண்­டோ­ரின் விகி­தத்­து­டன் ஒப்­பிட்டு இந்த எண்­ணிக்கை பெறப்­பட்­டது.

முன்­ன­தாக, தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ரைக் காட்­டி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோர், கொரோனா கிருமி தொற்றி தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனு­ம­திக்­கப்­பட அல்­லது உயி­ரி­ழக்­கும் சாத்­தியம் 14 மடங்கு அதி­கம் என்று இம்­மா­தத் தொடக்­கத்­தில் சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­தி­ருந்­தார். கொரோனா தொற்­றால் உயி­ரி­ழக்­கும் நால்­வ­ரில் மூவர், ஒரு­முறை மட்­டும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் அல்­லது தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் ஆவர்.

இம்­மா­தம் உயி­ரி­ழந்த 169 பேரில் கொரோனா தடுப்­பூசி போடா­த­வர்­கள் 84 பேர், ஒரு­முறை மட்­டுமே தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் 30 பேர் என்று அறி­யப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் நேற்று முன்­தி­னம் புதிய உச்­ச­மாக ஒரே நாளில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் 18 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். நேற்று முன்­தி­னம் இறந்த இந்த 18 பேரும், 55 வய­துக்­கும் 96 வய­துக்­கும் உட்­பட்­ட­வர்­கள். நேற்று முன்­தின நில­வரப்­படி கொரோனா தொற்­றால் மாண்­டோ­ரின் எண்­ணிக்கை 264ஆக அதி­க­ரித்­து­விட்­டது.

இதற்­கு­முன் இம்­மா­தம் 14ஆம் தேதி­யன்று 15 பேர் கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழந்­ததே ஒரு நாளில் பதி­வான ஆக அதிக உயி­ரி­ழப்பு எண்­ணிக்கை ஆகும்.

மாண்ட 18 பேரில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர் எண்­மர் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தி­ருந்­தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!