வெளிநாட்டு ஊழியர்களுக்கு 5,000 கொவிட்-19 படுக்கைகள்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு 5,000 கொவிட்-19 படுக்கைகள்

1 mins read
cd0ea272-e21e-41ac-9bed-f4341f76a458
-

கொவிட்-19 தொற்­றி­லி­ருந்து மீண்­டு­வ­ரு­வ­தற்­காக வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கென 5,000க்கும் மேற்­பட்ட படுக்­கை­கள் ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­பட்­டது.

இம்­மா­தத் தொடக்­கத்­தி­லி­ருந்து பெரிய தங்­கு­வி­டு­தி­களில் அமைந்­துள்ள மையப்­ப­குதி வளாகங்­களில் இந்­தப் படுக்­கை­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. அத்­து­டன் 48 தங்­கு­வி­டு­தி­களில் குண­ம­டை­வ­தற்­காக உள்ள வளாகங்­களில் மேலும் 6,000 படுக்­கை­கள் உள்­ளன.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் நல­னைப் பாது­காக்­கும் முயற்­சி­கள் குறித்து மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங், மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் கோ போ கூன் ஆகி­யோர் ஃபேஸ்புக்­கில் பதி­விட்­டி­ருந்­த­னர்.

வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்கு­வி­டு­தி­க­ளி­லும் அதி­க­ளவு தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வாகி வரும் நிலை­யில் இந்த அறி­விப்பு வந்­துள்­ளது.

குண­ம­டை­வ­தற்­காக ஒதுக்­கப்­பட்­டுள்ள வளா­கங்­க­ளின் படுக்­கை­களில் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட ஊழி­யர்­கள் தங்­க­லாம். அவர்­க­ளுக்கு அறி­கு­றி­கள் இருந்­தா­லும் அவை மித­மா­கவே இருக்க வேண்­டும்.

மையப்­ப­குதி வளா­கங்­களில் தங்கி, 7,900க்கும் மேற்­பட்ட ஊழி­யர்­கள் மீண்டு தங்­கு­விடு­தி­க­ளுக்­குத் திரும்­பி­விட்­ட­தா­க­வும் டாக்­டர் கோ தெரி­வித்­தார்.