துன்புறுத்தப்பட்ட மைனா: காப்பாற்றிய அமைப்பு

துன்புறுத்தப்பட்ட மைனா: காப்பாற்றிய அமைப்பு

1 mins read
efbfc691-b21e-4904-af3b-6aae60e519e3
-

மரக்­கி­ளை­யு­டன் பசை போன்ற பொரு­ளால் ஒட்­டப்­பட்­டி­ருந்த மைனாவை தக்க சம­யத்­தில் விலங்கு நல ஆய்வு, கல்வி சங்­கம் (ஏக்­கர்ஸ்) நேற்று முன்­தி­னம் காலை­யில் காப்­பாற்­றி­யது. சுவா சூ காங் ஸ்தி­ரீட் 51, புளோக் 503இல் சிக்­கித் தவித்த பறவையைப் பற்றி தனது அவ­ச­ர­சேவை எண்­ணுக்கு அழைப்பு வந்­த­தாக ஃபேஸ்­புக் பதி­வில் கூறி­யது.

"அந்த வெள்ளை மைனாப் பற­வை­யின் கால்­களும் இறக்­கை­களும் ஒரு மரக்­குச்­சி­யு­டன் ஒட்­டப்­பட்­டி­ருந்­தன. அந்­தக் குச்சி மரத்­து­டன் இணைத்து ரப்­ப­ரால் இணைக்­கப்­பட்­டி­ருந்­தது," என்று ஏக்­கர்ஸ் நிறு­வ­னத்­தின் இணைத் தலைமை நிர்­வாகியான திரு கலைவாணன் பால­கி­ருஷ்­ணன், 35, ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸி­டம் கூறி­னார். தற்­போது மைனா உடல்­ நலம் தேறி வரு­கிறது.

"சரி­யான நேரத்­தில் அழைப்பு வரா­மல் இருந்­தி­ருந்­தால், பறவை அதன் இற­கு­க­ளை­யும் நீர்ச்­சத்­தை­யும் இழந்து மன அழுத்­தம் மற்­றும் அதிர்ச்­சி­யால் இறந்­தி­ருக்­கும். அல்­லது வேட்­டை­யா­டும் வேறு விலங்­கி­டம் சிக்கி இருக்­கும்," என்றது ஏக்­கர்ஸ். இது வேண்டுமென்றே செய்யப்பட்ட செயல் என்று கருதப்படுகிறது.

சம்­ப­வம் குறித்­துத் தக­வல்கள் இருந்தால் acrescrime@gmail.com என்ற மின்­னஞ்­ச­லுக்கு அனுப்பி வைக்­கமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப் படுகின்றனர். www.avs.gov.sg/feedback அல்­லது 1800-476-1600 என்ற எண்­ணில் தொடர்­பு­கொள்­ள­லாம். விலங்கு வதைக்கு $15,000 வரை அபராதம் அல்லது 18 மாதம் வரைச் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.