சிங்கப்பூர் வரும் மலேசிய வாகனங்களுக்கு குறிப்பிட்ட கார் நிறுத்தப் பகுதி ஒன்று புக்கிட் பாத்தோக்கில் ஒதுக்கப்படும். அவை அங்கு நேரே சென்று நிறுத்துவதை உறுதி செய்யும் முறை ஒன்றும் வகுக்கப்படவுள்ளது.
இத்தகைய கார் நிறுத்த வசதியும் அதனுடன் கூடிய சரிபார்ப்பு முறையையும் அமைக்க ஒப்பந்தப் புள்ளி தயாராகி வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் தெரிவிக்கிறது.
ஒரே சமயத்தில் மலேசியாவி லிருந்து வரும் 2,000 வாகனங்கள் குறிப்பிட்ட இந்த கார் நிறுத்து மிடத்தில் நிறுத்துவதையும் அவை அங்கு நேரே செல்வதைக் கண் காணிக்கவும் இது வழிவகுக்கும்.
இந்தக் கண்காணிப்பு முறையின்படி, மலேசியாவில் வரும் வாகனங்கள் தீவு விரைவுச்சாலையில்