உலு பாண்டான் சமூக மன்றத்திற்குள் கார் புகுந்தது; இருவர் காயம்

உலு பாண்டான் சமூக மன்றத்திற்குள் கார் புகுந்ததில் இருவர் காயம் அடைந்தனர்.

எண் 170 கிம் மோ ரோட்டில் உள்ள அந்தச் சமூக மன்றத்தில் கார் விபத்து நிகழ்ந்ததாக நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.40 மணி அளவில் போலிசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்தில் 70 வயது ஆண் ஓட்டுநரும் 66 வயது பயணியும் காயம் அடைந்ததாக போலிசார் கூறினர். இருவரும் சுயநினைவுடன் காணப்பட்டனர்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அவர்களை மீட்டு தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.

உலு பாண்டான் சமூக மன்றத்தின் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி கதவுமீது கார் மோதியது.

விபத்துக்கான காரணம் குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!