கொவிட்-19 புதிய தொற்று எண்ணிக்கை அடிப்படையில் அதிக ஆபத்துள்ள நாடாக சிங்கப்பூரை சில நாடுகள் வகைப்படுத்தி இருக்கின்றன. இதனால் இங்கு வசிக்கும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அமைச்சர் ஓங் யி காங் நேற்று விளக்கினார்.
அந்த நாடுகள் விடுத்திருக்கும் அத்தகைய அறிவிப்புகள் அவற்றின் குடிமக்களுக்குத்தான் என்பதை அவர் சுட்டினார்.
சிங்கப்பூரில் இருந்து அந்த நாடுகளுக்குச் செல்லும், இருதடுப்பூசிகளும் போட்டுக்கொண்டவர்களுக்கு அந்த அறிவிப்புகளால் எந்த பாதிப்பும் இல்லை என்றார் அவர்.

