கொரோனா: மேலும் மரணங்கள்

கொரோனா: மேலும் மரணங்கள்

1 mins read
c75ba4d7-6e44-4a48-be5a-547833ec07cb
-

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொடர்பில் 14 பேர் மர­ண­ம­டைந்­து­விட்­ட­தாக சுகா­தார அமைச்சு வெள்­ளிக்­கிழமை தெரி­வித்­தது. அவர்­களுக்கு வயது 41 முதல் 97 வரை. மர­ண­ம­டைந்­த­வர்­களில் ஏழு பேர் ஆட­வர்­கள். ஏழு பேர் பெண்­கள்.

புதி­தாக மாண்­ட­வர்­களில் அஞ்­ச­லக சேமிப்பு வங்­கி­யின் (பிஓஎஸ்பி) தலைமை நிர்­வா­கி­யாக 24 ஆண்டு காலம் பணி­யாற்றி ஓய்­வு­பெற்ற பெர்ட்டி செங்­கும் ஒரு­வர்.

அவ­ருக்கு வயது 84. திரு பெர்ட்டி செங்­ தடுப்­பூசி போட்­டுக்­ கொள்­ள­வில்லை என்­பது தெரி­ய­வந்­தது. புதி­தாக மர­ண­ம­டைந்­த­வர்­க­ளை­யும் சேர்த்து சிங்­கப்­பூ­ரின் மொத்த கொரோனா மரண எண்­ணிக்கை 294 ஆக உயர்ந்­துள்­ளது.

வெள்­ளிக்­கி­ழமை புதி­தாக 3,637 பேருக்­கு கொரோனா தொற்று இருந்­த­தாகத் தெரி­ய­வந்­தது.

கிருமி தொற்­றி­யோ­ரின் மொத்த எண்­ணிக்கை 165,663 ஆனது.