வீட்டில் குணமடையும் ஏற்பாட்டில் கர்ப்பிணிகள் சேர்ப்பு

1 mins read
92f0fbab-b6f8-4749-968d-bd65a3a22691
-

முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட, 35 வயதை எட்­டாத, கருத்­த­ரித்து 26 வாரங்­கள் ஆகாத கர்ப்­பி­ணிப் பெண்­க­ளுக்கு கொவிட்-19 தொற்று ஏற்­பட்­டால் அவர்­கள் வீட்­டி­லேயே இருந்து குண­ம­டைய அனு­ம­திக்­கப்­ப­டு­வர்­.

என்­றா­லும் இந்த ஏற்­பாட்­டுக்கு அவர்­கள் பொருத்தமான­வர்­கள்­தானா என்­பது அவர்­க­ளுக்­குக் குறிப்­பிட்ட மருத்­து­வ­ம­னை­கள் நடத்­தும் பரி­சோ­தனை மூலம் உறு­தி­யா­க­வேண்­டும்.

கொவிட்-19 சிறப்­புப் பணிக்­குழு செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் நேற்­றுப் பேசிய வர்த்­தக தொழில் அமைச்­சர் கான் கிம் யோங், வீட்­டில் குண­ம­டை­யும் செயல்­திட்­டம் நீட்­டிக்­கப்­ப­டு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, வீட்­டி­லேயே குண­ம­டை­யும் செயல்­திட்­டத்­தில் இருப்­போ­ருக்­குத் தொலை­தூர மருத்­துவ ஆத­ர­வுச் சேவையை வழங்­கு­வ­தில் மேலும் அதிக தனி­யார் மருத்­து­வர்­கள் ஈடு­ப­டுத்­தப்­படு­வார்­கள் என்­றும் சிறப்­புப் பணிக்­குழு தெரி­வித்­தது.

கொவிட்-19 கிருமி தொற்றி இருந்­தாலும் அறி­குறி இல்­லாத அல்­லது இலே­சான அறி­கு­றி­யு­டன் கூடிய நோயா­ளி­கள் வீட்­டி­லேயே குண­ம­டை­யும் ஏற்­பாடு செப்­டம்­பர் 15 முதல் நடப்­புக்கு வந்­தது. அது இப்­போது இயல்­பா­ன­தாக ஆகி இருக்­கிறது.

இருந்­தா­லும் முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத, 50, அதற்­கும் அதிக வய­துள்ள மக்­களும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்ள 80, அதற்­கும் அதிக வய­துள்ள மக்­களும் இந்­தச் செயல்­திட்­டத்­தில் சேர்க்­கப்­ப­ட­வில்லை.

வீட்­டி­லி­ருந்து குண­ம­டைய பொருத்­த­மற்­ற­வர்­கள் என்­பது மருந்­தகப் பரி­சோ­தனை மூலம் தெரி­ய­வந்து இருக்­கும் 1 முதல் 4 வரை வய­துள்ள குழந்­தை­களும் பிறந்து ஓராண்டு ஆகாத கைக்­கு­ழந்­தை­களும் மருத்­துவமனை­யில் சிகிச்சை பெற வேண்­டிய தேவை இருக்­க­லாம் என்­பதையும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியது.