குளிரூட்டிகளைக் குறைவாகச் சார்ந்திருப்பது அல்லது சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் வெப்பத்தைத் தணிப்பது போன்ற தீர்வுகளைக் கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்றோர் முன்வைத்துள்ளனர். நீண்டகால நிலப் பயன்பாடு குறித்து கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
நகர மறுசீரமைப்பு ஆணையம் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் குறிப்பாக நான்கு அம்சங்களில் கவனம் செலுத்தியது. சிங்கப்பூரை அனைவரையும் பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கச் செய்வது, நிலைமைக்கேற்ப மாறும் ஆற்றலோடு மீள்திறனுடன் இருக்கச் செய்வது, நீடித்த நிலைத்தன்மையுடன் செயல்படவைப்பது, மக்கள் விரும்பும் வகையில் இருந்தபடி வித்தியாசமாக விளங்கவைப்பது ஆகியவை இந்த நான்கு அம்சங்கள்.
நீண்டகால நிலப் பயன்பாடு குறித்து மக்களின் கருத்துகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் தொடர்பிலான முதற்கட்ட நடவடிக்கையில் முன்வைக்கப்பட்ட கருத்துகளிலிருந்து இந்த அம்சங்கள் வரையப்பட்டன.
முதற்கட்ட நடவடிக்கை கடந்த ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெற்றது. அதில் 5,600க்கும் அதிகமானோரைக் கொண்டு கருத்தாய்வு நடத்தப்பட்டது.

