முக்கிய நடுவமாக சிங்கப்பூர் தொடர்ந்து திகழ புளூம்பர்க் புதிய பொருளியல் கருத்தரங்கு
இன்றியமையாதது என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
முக்கிய நடுவமாகத் தொடர்ந்து திகழ்வது சிங்கப்பூரின் பொருளியல் மீட்சிக்கு ஆதரவு அளிக்கும் என்றும் சிங்கப்பூரர்களுக்குத் தரமான வேலைகளை உருவாக்கும் என்றும் அமைச்சர் கான் கூறினார்.
வர்த்தகக் கட்டமைப்புகளை அமைத்துத் தருவது கருத்தரங்கின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.
எனவே, கருத்தரங்கு நடை
பெறும் இடங்களிலும் குறிப்பிட்ட சில உணவகங்களிலும் அதிகபட்சம் ஐந்து பேர் கொண்ட குழுக்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்த அனுமதி வழங்கப்படும் என்றார் திரு கான். கருத்தரங்கில் கலந்து கொள்வோர் குழுக்களாக இருந்து கலந்துரையாடல்களை நடத்த வேண்டி இருக்கும். இதனை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
"கருத்தரங்கில் கலந்துகொள்வோர் வெவ்வேறு இடங்களிலிருந்து வருபவர்கள். ஒன்றிணைந்து
கலந்துரையாட அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை அவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்புவர்," என்றார் திரு கான்.
பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட விதிமுறையிலிருந்து கருத்தரங்கில் கலந்துகொள்ளும்
பிரமுகர்களுக்கான விதிமுறை வேறுபடுவது தொடர்பாக சிலர் அதிருப்தி தெரிவித்திருப்பதைத் திரு கான் சுட்டினார்.
விதிமுறை மாற்றத்தால் கிருமிப் பரவல் ஏற்படக்கூடும் என்று சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அடுத்த மாதம் 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதிவரை கருத்தரங்கு கெப்பெல்லா சிங்கப்பூர் ஹோட்டலில் நடைபெறும்.
51 நாடுகளிலிருந்து 300க்கும் அதிகமானோர் கருத்தரங்கில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் தற்
போதைய, முன்னாள் உலகத் தலைவர்களும் உலகளாவிய தலைமை நிர்வாகிகளும் அடங்குவர்.
கிருமிப் பரவலைத் தடுக்க அதிகாரிகள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்
படுத்துவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்தரங்கு நடைபெறும் அனைத்து நாட்களிலும் அதில் கலந்துகொள்வோர் அன்றாடம் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
கருத்தரங்கில் கலந்துகொள்வோர் செல்லும் உணவகங்களுக்கு பொதுமக்கள் சென்றால் உள்ளே போவதற்கு முன்பு பரிசோதனை செய்து கிருமித்தொற்று இல்லை என உறுதி செய்துகொள்ள வேண்டும்.