பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் பயில மாணவர்களுக்கு வாய்ப்புகளை அள்ளித் தரும் பல்வேறு கல்விப் பாதைகள்

பல்­வேறு கல்வி ஆற்­றல்­க­ளைக் கொண்ட மேலும் பல மாண­வர்­கள் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் சேர்ந்­துப் பயில்­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் சேர்ந்­துப் பயில்­வ­தற்­கான கல்­விப் பாதையை விரி­வு­ப­டுத்­தி­யது பலன் அளித்­தி­ருப்­பதை இது நிரூ­பிப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

பல­து­றைத் தொழிற்­கல்­லூரி அடிப்­ப­டைத் திட்­டம் போன்ற அறி­மு­கத் திட்­டங்­க­ளின் விளை­வாகக் கூடு­தல் வழக்­க­நிலை மாண­வர்­கள் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் சேர்ந்­தி­ருப்­ப­தாக ஐந்­தில் மூன்று பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­கள் தெரி­வித்­துள்­ளன.

நன்­யாங், நீ ஆன், ரிபப்­ளிக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­கள் இந்­தத் தகவலை வெளி­யிட்­டன. பல­து­றைத் தொழிற்­கல்­லூரி அடிப்­

ப­டைத் திட்­டம் 2013ஆம் ஆண்­டில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

இத்­திட்­டத்­தின்­கீழ் வழக்­க­

நி­லை­யில் பயி­லும் உயர்­நிலை நான்கு மாண­வர்­கள் உயர்­நிலை ஐந்­துக்­குச் சென்று ஜிசிஇ

சாதா­ர­ண­நிலை தேர்வை எழு­து­வ­தற்­குப் பதி­லாக பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் அடிப்­ப­டைக் கல்வி பயில விண்­ணப்­பம் செய்­ய­லாம்.

கடந்த நான்கு ஆண்­டு­களில் தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தைச் சேர்ந்த மேலும் பல மாண­வர்­க­ளுக்­கும் வாய்ப்பு அளித்­துள்­ள­தாக நன்­யாங், நீ ஆன், ரிபப்­ளிக், தெமா­செக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­கள் தெரி­வித்­தன.

அதே கால­கட்­டத்­தில் இணைப்­பாட நட­வ­டிக்­கை­கள் போன்­ற­

வற்­றுக்­காக போனஸ் புள்­ளி­கள் கழிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்பு

சாதா­ர­ண­நிலை தேர்­வில் 15 அல்­லது அதற்­கும் குறை­வான புள்­ளி ­க­ளைப் பெற்ற மேலும் பல மாண­வர்­களை ஏற்­றுக்­கொண்­ட­தாக அந்த நான்கு பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­களும் கூறின.

கூட்டு மாண­வர் சேர்ப்பு நட­வ­டிக்­கை­யின்­போது பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் சேரும் இத்­த­கைய மாண­வர்­க­ளின் விகி­தம் அதி­க­ரித்­துள்­ள­தாக தெமா­செக் பல­து­றைத் தொழிற்­கல்­லூரி கல்வி விவ­கார இயக்­கு­நர் செங் சூன் லெங் தெரி­வித்­தார்.

2017ஆம் ஆண்­டில் இந்த விகி­தம் 60 விழுக்­கா­டாக இருந்­தது. கடந்த ஆண்டு அது 75 விழுக்­கா­டாக உயர்ந்­தது.

இத்­த­கைய திட்­டங்­க­ளின் கார­ண­மாக பல்­வேறு கல்­விப் பின்­ன­ணி­க­ளைக் கொண்ட மாண­வர்­கள் பல­து­றைத் தொழிற்­கல்­லூரி ­களில் தங்­கள் கல்­வி­யைத் தொடர்வது சாத்­தி­ய­மாகி உள்­ள­தாக தேசிய கல்­விக் கழ­கத்­தின் இணைப் பேரா­சி­ரி­யர் ஜேசன் டான் தெரி­வித்­தார். இந்­தத் திட்­டங்­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தால் மாண­வர்­கள், வேலை செய்­யும் பெரி­ய­வர்­கள் ஆகி­யோ­ரின் மதிப்­பெண்­களை மட்­டுமே அடிப்­ப­டை­யா­கக் கொண்டு அவர்­கள் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வ­தில்லை.

மாறாக, அவர்­க­ளு­டைய ஆற்­றல், ஆர்­வம், வேலை அனு­ப­வம் ஆகி­ய­வை­யும் கருத்­தில் கொள்­ளப்­ப­டு­கின்­றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!