சிங்கப்பூரின் முன்னாள் உளவுத் துறை சிறப்புப் பிரிவுத் தலைவரான திரு ஜார்ஜ் இ. போகார்ஸின் சுயசரிதை நேற்று வெளியிடப்பட்டது. அந்த நூலை செய்தித்துறையில் பழுத்த அனுபவம் கொண்ட பெர்தா ஹென்சன் புனைந்துள்ளார். சிங்கப்பூரின் முன்னோடி அரசாங்க ஊழியர்களில் ஒருவரான திரு போகார்ஸ், ஜப்பானிய ஆட்சிக்குப் பிறகு உளவுத்துறையின் சிறப்புப் பிரிவுக்குத் தலைமை தாங்கினார்.
கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான 'ஆப்பரேஷன் கோல்ட்
ஸ்டோரில்' அவரது பங்களிப்பு முக்கியமானது. சிங்கப்பூர் ஆயுதப் படையை அமைக்கவும் திரு போகார்ஸ் உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.