உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய நிலை எழுந்தால் மட்டுமே 995 எனும் எண்ணை அழைக்கும்படி பொதுமக்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அவசரநிலையற்ற சம்பவங்
களுக்கு அந்த எண்ணை அழைக்க வேண்டாம் என்று
வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவற்றில் கொவிட்-19 கிருமித்தொற்றும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், அவசரநிலை மருத்துவச் சேவைகளை அழைத்த கொவிட்-19 நோயாளிகளில் 50 விழுக்காட்டினருக்கு அவசரநிலை சிகிச்சை தேவை ஏற்படவில்லை என அதிகாரிகள் கூறினர்.
உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய நிலையின்போது மட்டுமே அவசரநிலை மருத்துவ சேவையைப் பெற 995 எண்ணை அழைக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் நேற்று தெரிவித்தன.
உண்மையிலேயே உயிருக்குப் போராடுவோருக்கு அவசரநிலை மருத்துவ சேவை கிடைக்க இது வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இம்மாதம் 15ஆம் தேதியிலிருந்து 21ஆம் தேதி வரை மருத்துவ உதவி கேட்டு ஏறத்தாழ 5,500 அழைப்புகள் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இவற்றில் 20 விழுக்காடு அழைப்புகள் கொவிட்-19
நோயாளிகளிடமிருந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அழைத்த நோயாளிகளில் 47 விழுக்காட்டினருக்கு மருத்துவ
மனைகளின் அவசரநிலைப்
பிரிவில் வெளிநோயாளி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்கள் அதே நாளில் வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டது.
15 விழுக்காட்டினர் மட்டுமே இரண்டு நாட்கள் அல்லது அதற்கும் குறைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.