உணவு நிறுவனங்கள் உரிமம் பெற புதிய நடைமுறைகள்

உணவு நிறுவனங்கள் உரிமம் பெற புதிய நடைமுறைகள்

2 mins read
8a90dbba-9ffb-43a0-8612-7de06e036a41
உணவு நிறுவனங்களுக்குத் தற்போதைய ஏ, பி, சி என்ற தரநிலைகளுக்குப் பதிலாக வெண்கலம், வெள்ளி, தங்க விருதுகள் வழங்கப்படும். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் வரும் 2023ஆம் ஆண்டு உண­வ­கங்­கள், உண­வுக்­க­டை­கள் போன்ற உணவு நிறு­வ­னங்­கள் உரி­மம் பெறு­வ­தற்­கான புதிய விதி­மு­றை­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும்.

வாடிக்­கை­யாளர்களுக்கு உணவுப் பாது­காப்பு பற்றி இன்­னும் அதிக உறுதி அளிப்­பது அதன் நோக்­கம் என்று சிங்­கப்­பூர் உணவு அமைப்பு நேற்று கூறி­யது.

உரி­மம் பெறும் புதிய விதி­ முறை­க­ளின் கீழ், உணவு நிறு­ வனங்­கள் கடந்த காலத்­தில் செயல்­பட்டு வந்த விதம் ஆரா­யப்­படும்.

அதா­வது அவர்­கள் குறிப்­பிட்ட காலத்­துக்கு உண­வுப் பாது­காப்­பில் தவ­று­கள் செய்­துள்­ளார்­களா என்று விதி­மு­றை­கள் கருத்­தில் எடுத்­துக்­கொள்­ளப்படும்.

அத்­து­டன் உணவு சுத்­த­மாக இருப்­பதை உறுதி செய்­வ­தற்­கான அதி­கா­ரி­களை நிறு­வ­னம் நிய­மித்­ததா என்­றும் கவ­னிக்­கப்­படும்.

வரும் 2023ஆம் ஆண்டு ஜன­வரி முதல் தேதி அன்று புதிய உணவு நிறு­வ­னங்­க­ளுக்­கான பாது­காப்பு உறுதி நடை­முறை நடப்­புக்கு வரும். அதில் சுமார் 23,000 நிறு­ வ­னங்­கள் இடம்­பெ­றும் என்று அமைப்பு கூறி­யது.

உண­வுக்­க­டை­கள், உண­வ­கங்­கள், 'கேட்­ட­ரிங்' நிறு­வ­னங்­கள், 'பேக்­கரி' கடை­கள், உணவு தயா­ரிப்பு நிறு­வ­ன­வங்­கள் போன்­றவை உணவு நிறு­வ­னங்­க­ளா­கக் கரு­தப்­ ப­டு­கின்­றன.

தற்­போது அவற்­றின் வளா­கங்­களில் ஆண்­டுக்கு ஒரு முறை உண­வுப் பாது­காப்­புச் சோத­னை­கள் நடத்­தப்­ப­டு­கின்­றன. அவற்­றின்­படி, உணவு நிறு­வ­னங்­கள் ஏ, பி, சி என்ற தர­நி­லை­க­ளைப் பெறு­கின்­றன.

ஆனால் புதிய நடை­மு­றை­யின் கீழ், இந்த தர­வ­ரிசை மாற்­றப்­படும். உணவு நிறு­வ­னங்­க­ளுக்கு வெண்­ க­லம், வெள்ளி, தங்க விரு­து­கள் வழங்­கப்­படும். அந்த விரு­து­க­ளுக்கு ஏற்­ப மூன்று அல்­லது ஐந்து அல்­லது பத்­தாண்­டு­க­ளுக்கு உரி­மம் வழங்­கப்­படும்.

விரு­தின் தரத்­துக்கு ஏற்ப, உரி­மத்­துக்­கான காலம் கூடும். நிறு­ வ­னம், கடையா, உண­வ­கமா, அல்­லது உண­வுத் தயா­ரிப்பு நிறு­வ­னமா என்­ப­தற்கு ஏற்ப விரு­துக்­கான தகுதி நிபந்­த­னை­கள் மாறும்.

தற்­போது தர­வ­ரிசை அளிக்­கும் நடை­முறை, அந்த குறிப்­பிட்ட நேரத்­தில் ஓர் உணவு நிறு­வ­னத்­தின் உண­வுப் பாது­காப்பு, சுத்­தம் ஆகி­ய­வற்­றின் தரத்­தைக் கண்­ட­றி­கிறது என்று சிங்­கப்­பூர் உணவு அமைப்­பின் துணைத் தலைமை நிர்­வாகி டான் லீ கிம் தெரி­வித்­தார்.

ஒப்­பு­நோக்க புதிய நடை­முறை உண­வ­கங்­க­ளின் தொடர்ச்­சி­யான செயல்­பா­டு­க­ளைக் கருத்­தில் எடுத்துக்கொள்­ளும் என்­றார் அவர்.

"உண­வுப் பாது­காப்பை உறுதி செய்ய நிறு­வ­னங்­கள் எடுக்­கும் தொடர்ச்­சி­யான முயற்­சி­களை இந்தப் புதிய நடை­முறை இன்­னும் தெளி­வா­கக் காட்­டும். அத­னால் வாடிக்­கை­யா­ளர்­கள் கூடு­தல் விவ­ர­ம­றிந்து தெரிவுகளைச் செய்யலாம் என்று திரு டான் கூறி­னார்.