கத்தி தாக்குதலுக்கு உதவிய முன்னாள் ஐடிஇ மாணவர்

கத்தி தாக்குதலுக்கு உதவிய முன்னாள் ஐடிஇ மாணவர்

2 mins read
0837813a-86fd-46a2-8ec2-6371de231083
-

தொழில்­நுட்­பக் கல்­விக் கழக (ஐடிஇ) கல்­லூரி கிழக்­கில் பயின்ற மாண­வர் ஒரு­வர் கடந்த பிப்­ர­வரி மாதம் பள்­ளிக்கு ரொட்டி வெட்டும் கத்­தியை எடுத்­துச் சென்­றார். பின்­னர் அவ­ரது நண்­பர் பள்ளி வளா­கத்­தில் அக்கத்­தி­யைப் பயன்­படுத்தி வேறொரு மாண­வ­ரைக் குத்­தி­னார்.

ரொட்டி வெட்டும் கத்­தியை எடுத்­துச் சென்ற 18 வயது இளை­யர் தமது நண்­ப­ருக்கு உத­வியதை மாவட்ட நீதி­மன்­றத்­தில் நேற்று ஒப்­புக்­கொண்­டார்.

இரண்டு இளை­யர்­கள் தற்­போது ஐடி­இ­யில் படிக்­க­வில்லை என்று அறி­வ­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறி­யது. தாக்­கு­தலை நடத்­திய 19 வயது இளை­ய­ரான பழ­னி­தாஸ் ராம­தாஸ் மீதான வழக்கு விசா­ரணை இன்­னும் நடை­பெ­ற­வில்லை.

தாக்­கு­த­லுக்கு உத­வி­ய ­18 வயது இளை­யர், இத­னு­டன் தொடர்­பில்­லாத வேறு குற்­றத்­தை­யும் ஒப்­புக்­கொண்­டார். 2019ஆம் ஆண்டு அக்­டோ­பர் மாதம் ஜேசன் டான் என்­ப­வ­ரி­ட­மி­ருந்து $20,000 ரொக்­கத்­தைத் திரு­டும் முயற்­சி­யில் அவர்­ கூட்டாகப் பங்­கெ­டுத்­தார்.

அச்சம்பவத்தின்­போது அவ­ருக்கு 17 வயது என்­ப­தால் குழந்­தை­கள், இளை­யர் சட்­டத்­தின் கீழ் அவ­ரது அடை­யா­ளத்தை வெளி­யிட முடி­யாது.

சென்ற பிப்­ர­வரி 15ஆம் தேதி 18 வயது இளை­யரை பழ­னி­தாஸ் தொடர்­பு­கொண்­டார். தம் நண்­ பருக்கு 'பிரச்­சினை' இருந்­த­தால் பள்­ளிக்கு ரொட்டி வெட்டும் கத்­தியை எடுத்து வரும்­படி அவர் இளை­ய­ரி­டம் கூறி­னார்.

பழ­னி­தாஸ் பின்­னர் தாம் குறி­வைத்த இளை­ய­ரி­டம், பள்­ளிக் கட்­ட­டத்­தின் அடித்­த­ளத்­தில் உள்ள கார் நிறுத்­து­மி­டத்­துக்கு வரச்­சொன்­னார். கத்தியைப் பயன்­ப­டுத்தி, அங்கு வந்­தி­ருந்த இளை­ய­ரைப் பல­முறை தாக்­கி­னார்.

இளை­யருக்கு இடது தோள் பட்­டை­யி­லும் இடது காதி­லும் காயங்­கள் ஏற்பட்டன.