செவி ஆற்றல் பிரச்சினை உள்ளோர் தங்களுக்கு உண்மையில் என்ன குறைபாடு இருக்கிறது என்பதை மருத்துவ ரீதியாகக்
கண்டறிய அறிமுகத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
'பியூர் டோன் ஆடியோமீட்டர்' எனும் சாதனத்தைக் கொண்டு இவர்களுக்குப் பரிசோதனை நடத்தப்படும்.
பைனியர் பலதுறை மருந்தகம், தியோங் பாரு சமூக சுகாதார நிலையம், சிங்கப்பூர் பொது
மருத்துவமனையின் உறக்கம் தொடர்பான சிகிச்சை நிலையம் ஆகியவற்றில் இந்த சிகிச்சை முறை வழங்கப்படுகிறது என்று தெரி விக்கப்பட்டுள்ளது.