தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் தடத் திட்டத்தின்கீழ் சிங்கப்பூருக்கு இதுவரை வந்துள்ள 5,134 பயணிகளில் ஐந்து பேர்
மட்டுமே கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் புள்ளிவிவரங்களை போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் நேற்று மெய்நிகர் செய்தி யாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
தடுப்பூசி போட்டுக்கொண்
டோருக்கான பயணத் தடத் திட்டத்தின்கீழ் சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள்.
மாறாக, அவர்கள் சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்பும் சிங்கப்பூரை அடைந்த பிறகும் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
கடந்த மாதம் 8ஆம் தேதியன்று ஜெர்மனி, புருணை ஆகிய நாடு
களைச் சேர்ந்த பயணிகளுக்கு இந்தத் திட்டத்தை சிங்கப்பூர் தொடங்கியது.
இம்மாதம் 19ஆம் தேதியன்று கனடா, டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது.
அடுத்த மாதம் 15ஆம் தேதியன்று தென்கொரியப் பயணி
களுக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும்.
நேற்று முன்தின நிலவரப்படி கடந்த மாதம் 8ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 30ஆம் தேதி வரை சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ள புருணையைச் சேர்ந்த 290 பயணிகளுக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த 6,226 பயணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை புருணையிலிருந்து 152 பயணிகளும் ஜெர்மனியிலிருந்து 3,610 பயணிகளும் சிங்கப்பூருக்கு வந்துவிட்டனர்.
இதற்கிடையே, இம்மாதம் 19ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 30ஆம் தேதியிலிருந்து ஏனைய நாடுகளிலிருந்து 8,583 பயணி
களுக்குச் சிங்கப்பூருக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 1,372 பயணிகள் சிங்கப்பூருக்கு வந்துவிட்டனர்.