தாதிமை இல்லவாசிகளுக்கு மட்டுமே கிருமித்தொற்று

தாதிமை இல்லவாசிகளுக்கு மட்டுமே கிருமித்தொற்று

1 mins read
3399742c-f627-42c0-bac0-ae777aedf0df
-

ஜூரோங் வெஸ்ட்­டில் உள்ள என்டியுசி ஹெல்த் தாதிமை இல்­லத்­தில் உள்ள கொவிட்-19 கிரு­மித் தொற்­றுக் குழு­மத்­தைச் சேர்ந்த 15 பேரும் இல்­ல­வா­சி­கள் என்று அது கூறி­யுள்­ளது. வார்­டு­களில் பணி­ பு­ரி­யும் எந்த ஊழி­ய­ருக்­கும் கிருமி இது­வரை தொற்­ற­வில்லை என்று அந்­நி­று­வ­னம் ஃபேஸ்புக்­கில் நேற்றுக் காலை பதி­விட்­டது.

தாதிமை இல்­லத்­தின் பாதிக்­கப்­பட்ட பகு­தி­கள் தனிமைப்­ப­டுத்­தப் பட்­டு­விட்­ட­தா­க­வும் அது கூறி­யது.

எஞ்­சி­யுள்ள 230 இல்­ல­வாசி களுக்­கும் கிரு­மிப் பரி­சோ­த­னை­கள் நடை­பெற்று வரு­கின்­றன. வழக்­க­மான கண்­கா­ணிப்­புப் பரி­சோ­த­னை­க­ளுக்கு அப்­பாற்­பட்டு இந்­தப் பரி­சோ­த­னை­கள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.

சுகா­தார அமைச்சு நேற்று முன்­தி­னம் இரவு ஜூரோங் வெஸ்ட்­டில் உள்ள என்­டி­யுசி ஹெல்த் தாதிமை இல்­லத்­தில் உள்ள தொற்­றுக் குழு­மம் பற்றி தெரி­வித்­தி­ருந்­தது.

கிரு­மிப் பர­வல் தொடங்­கி­ய­தி­லி­ருந்து முன்­னெச்­செ­ரிக்கை நட­வ­டிக்­கை­களை அதி­க­ரித்­துள்­ள­தாக என்­டி­யுசி ஹெல்த் கூறி­யது.

தொற்று பர­வா­மல் இருக்க, ஊழி­யர்­கள் குறிப்­பிட்ட இடங்­க­ளுக்கு மட்­டும் செல்­ல அனுமதிக்கப் படு­கிறது. அத­னு­டன், இல்­லம் கூடு­த­லாக சுத்­தம் செய்­யப்­ப­டு­ வது­டன், எல்லா குடி­யி­ருப்­பா­ளர்­ க­ளுக்­கும் தின­மும் இரண்டு முறை உடல்­வெப்­பச் சோத­னை­கள் செய்­யப்­ப­டு­கின்­றன.

மேலும், ஊழி­யர்­கள் தனி­ந­பர் பாது­காப்புக் கவச ஆடை­களை அணிவதுடன் வாரம் இரு முறை விரை­வுக் கிரு­மிப் பரி­சோ­த­னை க­ளைச் செய்­து­கொள்ள வேண்­டும்.