சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு
இறுதிக்குள் மேலும் 200 வேலை வாய்ப்புகளை அமேசான் நிறுவனம் உருவாக்க இருக்கிறது.
ஏஷியா ஸ்குவேர் டவர் 1ல் புதிய மூன்று மாடி அலுவலகத்தை அது திறந்துள்ளது.
தொழில்நுட்பம் சார்ந்த, தொழில்நுட்பம் சாரா ஆரம்பநிலையிலிருந்து நடுத்தர நிர்வாக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று
சிங்கப்பூருக்கான அமேசான் மேலாளர் ஹன்ரி லோ தெரிவித்தார். சேவை நிர்வாகம், கணக்கியல் நிபுணத்துவப் பதவிகளும் அவற்றில் அடங்கும்.
அமேசானின் தளங்களுக்கு விற்பனையாளர்களை ஈர்த்து அவர்களது வாடிக்கையாளர்
வட்டத்தை விரிவுப்படுத்தவும்
இந்தப் பதவியில் இருப்பவர்கள் உதவுவர் என்று தெரிவிக்கப்பட்டது. அமேசானின் புதிய பொருட்
களையும் அம்சங்களையும் அறி
முகப்படுத்த திட்ட நிர்வாகிகள் பணியில் அமர்த்தப்படுவர். மனித வளப் பிரிவிலும் நிதிப் பிரிவிலும் வேலைக்கு ஆட்கள் எடுக்கப்படும் என்று திரு லோ கூறினார்.
சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 2,000 முழுநேர ஊழியர்களையும் பகுதிநேர ஊழியர்களையும் அமேசான் வேலையில் அமர்த்தியுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள்.
2019ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் 1,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை நேரடியாக உருவாக்கி யதாக அமேசான் தெரிவித்தது.
பயனீட்டாளர் வர்த்தகம், நிறுவன விழாக்கள் தொடர்பாக உருவாக்கப்பட்ட 110 வேலை வாய்ப்பு களைத் தவிர்த்து, புதிதாக 200 வேலை வாய்ப்புகளையும் அமேசான் உருவாக்கும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.
புதிய அலுவலகத்தின் திறப்பு விழாவில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் பேசிய திரு லோ,
இந்தத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். புதிய அலுவலகத்தில் அதிகபட்சம் 700 ஊழியர்கள் பணிபுரிவர் என்று தெரிவிக்கப்பட்டது. 30க்கும் அதிகமான குழுக்கள் அங்கிருந்து செயல்படும். இவற்றில் அமேசான்.sg, அமேசான் ஃபிரெஷ், அமேசான் விளம்பரம், பிரைம் வீடியோ ஆகியவை அடங்கும். சிங்கப்பூரில் அமேசானுக்கு இருக்கும் அலுவலகங்களுடன் புதிய அலுவலகமும் செயல்படும் என்றார் திரு லோ.
வீட்டிலிருந்து வேலை செய்ய, அலுவலகத்துக்கு வெளியிலிருந்து வேலை செய்ய அல்லது சில நாட்கள் வீட்டிலிருந்தும் சில நாட்கள் அலுவலகத்திலும் ஊழியர்கள் பணிபுரிய நீக்குப்போக்குமிக்க அணுகு முறை கடைப்பிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஊழியர்களின் வேலையைப் பொறுத்து தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்று திரு லோ கூறினார். "குறிப்பிட்ட ஒரு நிகழ்வுக்கு ஊழியர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடும் முறையை நாங்கள் பின்பற்றுவதில்லை. ஆனால் நீக்குப்போக்குமிக்க அணுகு முறை கடைப்பிடிக்கப்பட்டாலும் அலுவலகத்திற்கு அறவே வராத நிலை என்றாகி
விடாது.
"வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை அனைவருக்கும் பொருந்தாது என்று எங்களுக்குப் புரிகிறது. பாதுகாப்புமிக்க, வேலை செய்ய தோதான சுற்றுச்சூழலை அமைப்பதே எங்கள் இலக்கு," என்று திரு லோ தெரிவித்தார்.