பசுமைத் திட்டத்துக்கு $6 மி. கடன்

பசுமைத் திட்டத்துக்கு $6 மி. கடன்

1 mins read
61fa6eb7-5314-4887-bca5-d76f9403b201
-

சிங்கப்பூர் தொழில்நுட்ப நிறுவனமான 'டுரபவர்' குழுமத்துக்கு வழங்கப்படும்

$6 மில்லியன் பெறுமானமுள்ள பசுமை வர்த்தகக் கடனை எச்எஸ்பிசி சிங்கப்பூர் நீட்டித்துள்ளது.

இதன்மூலம் நிறுவன நிதி-பசுமைத் திட்டத்தின் மூலம் நிதி வழங்கும் முதல் நிதி நிறுவனமாக எச்எஸ்பிசி சிங்கப்பூர் திகழ்கிறது.

இந்தக் கடனைப் பயன்படுத்தி 'டுரபவர்' குழுமம் அதன் உயர் தொழில்நுட்ப எரிசக்தி சேமிப்புத் தீர்வுகளுக்கான மேம்பாட்டுப் பணிகளை விரைவுப்படுத்த லாம் என்று எச்எஸ்பிசி சிங்கப்பூர் கூறியது.