$170,000 போலி பொருள் விற்பனை: மூவர் கைது

$170,000 போலி பொருள் விற்பனை: மூவர் கைது

1 mins read
27335b8c-7424-4284-a920-25cad45ad5a0
-

போலிப் பொருட்­களை இணை­யத்­தில் விற்­பது தொடர்­பாக போலி­சார் மூன்று ஆட­வர்­க­ளைக் கைது செய்­துள்­ள­னர். அவர்­கள் 30க்கும் 45க்கும் இடைப்­பட்ட வய­தி­னர். இவர்­களில் ஒரு­வர் தொலை­தூர சூதாட்ட நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டது தொடர்­பாக விசா­ரிக்­கப்­பட்டு வரு­வ­தாக போலி­சார் நேற்று ஓர் அறிக்­கை­யில் தெரி­வித்­த­னர்.

ஜாலான் சுல்­தான், உட்­லண்ட்ஸ் சர்­கிள் மற்­றும் பிடோக் ரெசர்வோர் ரோடு போன்ற பகு­தி­களில் கடந்த திங்­கட்­கி­ழமை போலி­சார் சோதனை நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­னர்.

அப்­போது கணி­னி­க­ளை­யும், கைபே­சி­கள் ஆகி­ய­வற்­றோடு 600க்கும் மேற்­பட்ட போலி ஆடை

­க­ளை­யும் கைப்பைகளை­யும் மற்­றும் சில பொருட்­க­ளை­யும் போலிஸ் அதி­கா­ரி­கள் அந்த இடங்­களில் கைப்­பற்­றி­னர். பறி­மு­தல் செய்­யப்­பட்ட அனைத்­துப் பொருட்­க­ளின் சந்தை மதிப்பு சுமார் $170,000. இச்­சம்­ப­வம் தொடர்­பாக விசா­ரணை நீடிப்­ப­தாக போலி­சார் கூறி­யுள்­ள­னர்.

வணிக முத்­தி­ரைச் சட்­டத்­தின்­கீழ் போலிப் பொருட்­களை விற்­ப­வர் அல்­லது விநி­யோ­கிப்­ப­வ­ருக்கு $100,000 வரை­யி­லான அப­ரா­தம் ஐந்­தாண்டு வரை­யி­லான சிறைத் தண்­டனை போன்­றவை விதிக்­கப்­ப­ட­லாம்.

தொலை­தூர சூதாட்­டச் சட்­டத்­தின்­கீழ் எவ­ரா­வது சிங்­கப்­பூர் தொடர்­பான சூதாட்­டச் சேவை­களை வழங்கி குற்­ற­மி­ழைத்­தால் அவ­ருக்கு $20,000க்கும் $500,000க்கும் இடைப்­பட்ட தொகை அப­ரா­த­மாக விதிக்­கப்­படும். மேலும் அவரை ஏழாண்டு வரை­யில் சிறை­யில் அடைக்க சட்­டத்­தில் இட­முண்டு.