உண­வங்­காடி நிலை­யங்­களில் விதிமீறிய 38 பேர் பிடிபட்டனர்

1 mins read
7137cb59-8a94-4b47-a377-140559ae75ab
-

உண­வங்­காடி நிலை­யங்­களில் அக்­டோ­பர் 20ஆம் தேதிக்­கும் அக்­டோ­பர் 26ஆம் தேதிக்­கும் இடை­யில் உணவு உண்டவர்களில் 38 பேர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள், அல்லது முழு­மை­யாக தடுப்பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் என்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

பாது­காப்பு இடை­வெளி விதியை நடை­மு­றைப்­ப­டுத்­தும் அம­லாக்க அதி­கா­ரி­கள் மேற்­கொண்ட பரி சோ­த­னையின்­போது உண­வங்­காடி­ நிலையங்களில் அவர்­கள் விதியை மீறி­யி­ருந்­தது தெரி­ய­வந்­த­தாக தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் கூறியது.

அந்த நபர்களின் விவ­ரங்­கள் குறித்துக் கொள்­ளப்­பட்­டன. அவர்­களுக்கான தண்­டனை பற்­றிய விவ­ரங்­களை வாரி­யம் வெளி­யி­ட­வில்லை. உண­வங்­காடி நிலை­யங்­களி­லும் காப்­பிக்கடை­க­ளி­லும் முற்றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­ வர்­கள் மட்­டுமே சாப்­பிட அனு­மதிக்­கும் செயல்­திட்­டம் அக்­டோ­பர் 13ஆம் தேதி தொடங்­கி­யது.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத அல்­லது ஒரு தடுப்­பூ­சியை மட்­டும் போட்­டுக்­கொண்­டுள்ள மக்­கள் உண­வங்­கா­டி­ நிலையங்களில் அமர்ந்து சாப்பிட முடி­யாது.

வேண்டு­மா­னால் உணவை வாங்­கிச்செல்­ல­லாம். 12 மற்றும் அதற்கும் குறைந்த வயது சிறார்­க­ளுக்கு விதி­வி­லக்கு உண்டு.

இத­னி­டையே, உண­வங்­காடி நிலை­யங்­களில் அக்­டோ­பர் 22ஆம் தேதி முதல் ஞாயிறு வரை கொவிட்-19 விதியை மீறிய 41 பேருக்கு எதி­ராக தான் நட­வ­டிக்கை எடுத்­த­தாக வாரி­யம் கூறி­யது.