குடும்ப வன்முறைக்கு எதிரான பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றது

குடும்ப வன்முறைக்கு எதிரான பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றது

2 mins read
999b9982-a426-4117-98dc-ea4f6cc9bf61
-

குடும்ப வன்­மு­றை­க­ளுக்கு எதி­ரான பணிக்­கு­ழு­வின் பரிந்­து­ரை­களை அர­சாங்­கம் முழு­மை­யாக ஏற்­றுக்­கொண்­டது.

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி நேற்று இதனை அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­வித்­தார்.

அடுத்த மூன்று ஆண்­டு­களில் பரிந்­து­ரை­கள் ஒவ்­வொன்­றாக அமல்­ப­டுத்­தப்­படும். அவற்­றில் மூன்று பரிந்­து­ரை­கள் முத­லில் செயல்­ப­டுத்­தப்­படும் என்று அமைச்­சர் கூறி­னார்.

குடும்ப வன்­முறை பற்­றிய விழிப்­பு­ணர்வை அதி­க­ரிக்­கச் செய்­தல், திரு­மண ஆயத்­தம் தொடர்பான போத­னையை மேம்­ப­டுத்­து­தல், தேசிய குடும்ப வன்­முறை நேரடி உதவி தொலை­பேசி தொடர்பை வலுப்­ படுத்­து­தல் ஆகி­யன அந்த மூன்று பரிந்­து­ரை­க­ள்.

சுவா சூ காங்­கில் உள்ள ஃபெய் யூவே குடும்ப சேவை நிலை­யத்­துக்கு நேற்று அமைச்­சர் மச­கோஸ் வரு­கை­ய­ளித்­தார். அப்­போது அங்­குள்ள ஊழி­யர்­க­ளி­டம் அவர் கலந்­து­ரை­யா­டி­னார்.

பரிந்­து­ரை­களை பற்றி மேலும் பேசிய அவர், சட்ட வழி­யில் மேம் ­ப­டுத்த வேண்­டிய சில பரிந்­து­ரை­கள் குறித்து ஆராய்ந்து வரு­வ­தா­க­வும் சொன்­னார்.

"ஆனால் அதற்கு சில காலம் பிடிக்­க­லாம், சில அம்­சங்­களில் புதிய சட்­டங்­களை இயற்ற வேண்­டி­யி­ருக்­கிறது அல்­லது தற்­போ­துள்ள சட்­டங்­களைத் திருத்த வேண்­டி­யி­ருக்­கிறது. குடும்ப வன்­மு­றை­களை எதிர்­கொள்­வ­தில் போலிஸ் போன்ற அர­சாங்க அமைப்­பு­க­ளின் ஒத்­து­ழைப்­பும் அவசியம். இதனால் ஓரிரு ஆண்­டு­கள் ஆக­லாம்," என்றார் அமைச்­சர்.

ஏறக்­கு­றைய 3,600 குடும்ப வன்­மு­றைச் சம்­ப­வங்­களை ஆய்வு செய்த குடும்ப வன்­மு­றைக்கு எதி­ரான பணிக்­குழு கடந்த செப்­டம்­பர் மாதம் 16 பரிந்­து­ரை­களை முன்­வைத்­தது.

குடும்ப வன்­மு­றை­யால் பாதிக்­கப்­ப­டு­வோர் எளி­தில் உத­வி­க­ளைப் பெற­வும் தங்­களை சிறந்த வழி­யில் பாது­காத்­துக் கொள்­ள­வும் பரிந்­து­ரை­கள் முன்வைக்­கப்­பட்­டுள்­ளன.

குடும்ப வன்­மு­றை­யால் பாதிக்­கப்­ப­டு­வோர் அனு­மதி வழங்­கா­விட்­டா­லும், அவர்­களை ஆதிக்­கம் செலுத்­து­ப­வர்­கள் தடையாக இருந்தாலும் சமூ­க­நல தலைமை இயக்­கு­நர் உட்­பட மூன்றாம் தரப்­பி­னர் தனி­ந­பர் பாது­காப்பு உத்­த­ர­வுக்கு விண்­ணப்­பிக்­க­வும் பரிந்­து­ரை செய்யப்­பட்­டுள்­ளது. நேற்று ஃபேஸ்புக்­கில் தமது கருத்தை பதி­விட்ட அமைச்­சர் மச­கோஸ், அர­சாங்­க­மும் சமூ­க­நல அமைப்­பு­களும் இணைந்து செயல்­பட்­டால் குடும்ப வன்­மு­றையை தடுத்து நிறுத்த முடி­யும் என்­ப­தற்கு பணிக்­கு­ழு­வின் பரிந்­து­ரை­கள் சிறந்த உதா­ர­ணம் என்று குறிப்பிட்டார்.