ஓங் டெங் சியோங் மகன்கள் பிரச்சினை தீர்ந்தது

ஓங் டெங் சியோங் மகன்கள் பிரச்சினை தீர்ந்தது

1 mins read
70453b9c-aac6-4f90-aec7-e7ed973b5fce
-
Google News Preferred Icon

முன்­னாள் அதி­பர் ஓங் டெங் சியோங்­கின் மகன்­கள் தங்­க­ளுக்கு இைடயி­லான குடும்ப வர்த்த­கப் பிரச்­சி­னையை சுமூ­க­மாக தீர்த்­துக் கொண்­ட­தாக தெரி­வித்­துள்­ள­னர். பெற்­றோர் உரு­வாக்­கிய ஓங் அண்ட் ஓங் நிறு­வ­னத்­தில் தமக்கு இருந்த 28.45 விழுக்­காடு பங்கை குறை­வான விலை­யில் வாங்கி விட்­டார்­கள் என்று மூத்த மகன் ஓங் சே குவான் தமது தம்பி ஓங் சே பூன் மற்­றும் ஆறு பங்­கு­தாரர்­கள் மீது வழக்­குத் தொடுத்­தார். $5.4 மில்­லி­யன் மதிப்­புள்ள பங்­கு­களை $1.65 மில்­லி­ய­னுக்கு பங்­கு­தா­ரர் ­க­ளுக்கு மாற்­றப்­பட்­ட­தா­க­வும் அவர் கூறி­னார். இதற்கு 70.43% பங்­குகளை வைத்­தி­ருந்த அவ­ரது தம்பி சே பூனும் மற்ற பங்­கு­ தா­ரர்­களும் நிறு­வன விதி­மு­றைப்­படி தாங்கள் நடந்­துள்ளதாகக் ­கூறி­னர். மேலும் அண்­ணண் மீது அவ­ம­திப்பு வழக்­குத் தொடுத்­தார் தம்பி. இந்­நிலை­யில் பிரச்­சினை சுமூ­க­மாக தீர்த்­துக் கொள்­ளப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அது பற்­றிய விவ­ரம் தெரியவில்லை.