ஊழியருக்கு 9 வாரச் சிறை

ஊழியருக்கு 9 வாரச் சிறை

1 mins read
a91bc0da-1f88-42fd-a7c7-6bee9d60f72b
-

பெரி­ய­வர்­க­ளுக்­கான பரா­ம­ரிப்பு இல்­லத்­தில் ஆட்­டி­சம், அறி­வாற்­றல் குறை­பாடு, வலிப்பு போன்­ற­வற்­றால் பாதிக்­கப்­பட்ட ஒரு­வர், அங்கு இருந்த ஊழி­ய­ரின் சட்­டை­யைப் பிடித்து இழுத்தார்.

இத­னால் ஆத்­திரமடைந்த 28 வயது ஊழி­யர், அவரை இரண்டு முறை தாக்­கி­ய­தோடு தரை­யில் இழுத்­துச் சென்­றுள்­ளார்.

கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதம் 9ஆம் தேதி நடந்த சம்­ப­வத்­தில் இந்­திய நாட்­ட­வ­ரான அந்த ஊழி­ய­ருக்கு நேற்று ஒன்­பது வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

தீர்ப்பு வழங்­கி­ பே­சிய மாவட்ட நீதி­பதி ஜான் இங், இத்­த­கைய வேலை­யில் சிர­மங்­கள் இருப்­பதை உணர்ந்­தி­ருப்­ப­தா­கக் கூறி­னார்.

வொர்க் பர்­மிட்­டில் வேலை செய்த ஊழி­யரை நோக்கி பேசிய நீதி­பதி, "உங்­க­ளைப் போன்­ற­வர் ­க­ளின் வேலை எளி­தல்ல. இருந்­தா­லும் இத்­த­கைய செயல்­களை மன்­னிக்க முடி­யாது," என்­றார்.

இந்­தச் சம்­ப­வத்­தில் பாதிக்­கப்­பட்­ட­வ­ரின் அடை­யா­ளம் தெரி­யக்­கூ­டாது என்­ப­தால் ஊழி­ய­ரின் பெய­ரை­யும் அவர் பணி­யாற்­றிய இல்­லத்­தின் பெய­ரை­யும் வெளி­யிட நீதி­மன்­றம் தடை விதித்­தது.

பரா­ம­ரிப்பு ஊழி­யர், இல்ல வாசியை 2019ஆம் ஆண்­டில் இருந்து பரா­ம­ரித்து வந்­துள் ­ளார்.