தேசிய கொடியைப் பறக்கவிடுதல் தொடர்பான வழிமுறைகளைத் தளர்த்த அரசாங்கம் பரிசீலனை

தேசிய கொடியைப் பறக்கவிடுதல் தொடர்பான வழிமுறைகளைத் தளர்த்த அரசாங்கம் பரிசீலனை

3 mins read
51ad5818-054e-427f-9c0c-6305ab88f2ef
கலை­ந­யத்­து­ட­னும் வர்த்­தக பயன்­பாட்­டுக்­கா­க­வும் தேசிய கொடி, தேசிய கீதம், நாட்­டுப் பற்று ஆகிய தேசிய மர­பு­ரி­மைச் சின்­னங்­களை மக்­கள் எவ்­வித அச்­ச­மும் இன்றி பயன்­ப­டுத்த சட்­டத் திருத்­தம் வகை செய்­யும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தேசிய தினக் காலத்­தின்­போது மட்­டு­மல்­லா­மல் மற்ற நேரங்­க­ளி­லும் சிங்­கப்­பூ­ரர்­கள் தேசிய கொடி­யைப் பறக்­க­விட அனு­ம­திக்­கப்­ப­ட­லாம். தேசிய கொடி­யின் மரி­யா­தைக்கு எவ்­வித பங்­க­மும் இல்­லா­மல் தேசிய கொடி உட்­பட தேசிய மர­பு­ரி­மைச் சின்­னங்­க­ளை­யும் இன்­னும் தன்­னம்­பிக்­கை­யு­டன் பயன்­ப­டுத்த புதிய சட்­டத் திருத்­தம் வழி வகுக்கலாம்.

சிங்­கப்­பூர் மர­பு­ரி­மைச் சின்­னங்­கள், தேசிய கொடி, தேசிய கீதம் சட்­டத்­தில் திருத்­தங்­க­ளைக் கொண்டுவர, தான் பரி­சீ­லித்து வரு­வ­தாக நேற்று கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்சு தெரி­வித்­தது.

தற்­போ­தைய அந்­தச் சட்­டத்­தின்­படி, தேசிய கொடி ஜூலை 1 முதல் செப்­டம்­பர் 30ஆம் தேதி வரை­தான் பறக்­க­விட அனு­ம­திக்­கப்­படும். இந்­தக் காலத்­தைத் தாண்டி இதர விழாக் காலங்­க­ளி­லும் அவற்­றைப் பறக்­க­விட, சட்­டத்­தில் திருத்­தம் கொண்டு வரப்­படும்.

கலை­ந­யத்­து­ட­னும் வர்த்­தக பயன்­பாட்­டுக்­கா­க­வும் தேசிய கொடி, தேசிய கீதம், நாட்­டுப் பற்று ஆகிய தேசிய மர­பு­ரி­மைச் சின்­னங்­களை மக்­கள் எவ்­வித அச்­ச­மும் இன்றி பயன்­ப­டுத்த சட்­டத் திருத்­தம் வகை செய்­யும்.

இந்­தச் சட்­டத்­தில் கொண்டு வரப்­படும் திருத்­தங்­களும் தேசிய மர­பு­ரி­மைச் சின்­னங்­க­ளைப் பயன்­படுத்­து­வது குறித்த வழி­மு­றை­கள் அடுத்த ஆண்டு பொது­மக்­க­ளின் பார்­வைக்கு வைக்­கப்­பட்டு, அது அடுத்த ஆண்­டி­லேயே இறுதி செய்­யப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

சட்­ட அடிப்­படை அல்­லாத இதர மாற்­றங்­களும் அறி­மு­கப்­படுத்­தப்­படும்.

நாட்­டுப் பற்­று­றுதி, தேசிய கீதம் ஆகி­ய­வற்­றுக்­கான தரப்­ப­டுத்­தப்­பட்ட சைகை மொழி­யும் தேசிய மர­பு­ரி­மைச் சின்­னங்­களை மக்­க­ளின் வாழ்க்­கை­யில் முக்­கி­ய­மான அம்­ச­மாக விளங்­கு­வது குறித்து அமைப்­பு­க­ளு­டன் இணைந்து பணி­யாற்­று­வ­தும் அவற்­றில் அடங்­கும்.

தேசிய மர­பு­ரி­மைச் சின்­னங்­களை கலை­ந­யத்­து­ட­னும் நன்­ம­திப்­பு­ட­னும் பயன்­ப­டுத்த பள்­ளி­களில் கலைக் கல்­வி­ போதிக்­கப்­ப­ட­வும் பரிந்­து­ரைக்­கப்­ப­ட­லாம்.

தேசிய மர­பு­ரி­மைச் சின்­னங்­களின் பயன்பாடு பற்றி ஆராய்வ தற்கு அமைக்­கப்­பட்ட குடி­மக்­கள் பணிக்­குழு, கடந்த ஜூலை மாதம்­அதன் அறிக்­கையை வெளி­யிட்­டது.

அதில், மக்­கள் தேசிய மர­பு­ரி­மைச் சின்­னங்­களை அதற்­கு­ரிய பெரு­ம­திப்­பு­டன் ஆக்­க­பூர்­வ­மா­கப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு சம்­பந்­தப்­பட்ட அமைப்­பு­கள் சட்­டத்­தில் சற்று தளர்­வைக் கொண்டு வர­லாம் என்று பணிக்­குழு பரிந்­து­ரைத்­தது.

இந்­தப் பரிந்­து­ரை­கள் குறித்து கருத்­து­ரைத்த கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்­சர் எட்­வின் டோங், "நமது தேசிய மர­பு­ரி­மைச் சின்­னங்­களை மதிப்­பு­டன் பயன்­படுத்­து­வ­தன் முக்­கி­யத்­து­வத்தை மக்­கள் அறிந்­து­கொள்ள முறை­யான பொதுக் கல்வி அவ­சி­யம் என்­பதைப் பணிக்­குழு சரி­யாக அடை­யா­ளம் கண்­டுள்­ளது.

"அக்­குழு தனது அறிக்­கை­யில் தெரி­வித்­தப்­படி, தேசிய மர­பு­ரி­மைச் சின்­னங்­களை தேசிய மைல்­கல் சாத­னை­களில் முக்­கி­ய­மான இடம் பெ­றச் செய்­வ­து­டன், அவற்றை அன்­றாட வாழ்க்­கை­யி­லும் மக்­கள் பயன்­ப­டுத்த வழி ஏற்­ப­டுத்­தப்­ப­ட­லாம்.

"கொவிட்-19 சூழ­லில் மக்­க­ளுக்கு மேலும் உற்­சா­கத்தை அளிக்­கும் வகை­யில் தேசிய கொடி­யைப் பறக்­க­வி­டும் காலத்தை அர­சாங்­கம் கடந்த ஆண்டு நீட்­டித்­தது. அந்­தக் கால நீட்­டிப்பு தொட­ர­லாம் என்­றும் பணிக் குழு பரிந்­து­ரைத்­துள்­ளது," என்­றும் சொன்­னார்.

"தேசிய மர­பு­ரி­மைச் சின்­னங்­க­ளைத் தவ­றா­கப் பயன்­ப­டுத்­தும் வாய்ப்பு பற்­றி­யும் பணிக் குழு­வும் கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்­சும் நன்கு அறிந்­துள்­ளன.

கடந்த ஜூலை மாதத்­தில், தேசிய மர­பு­ரி­மைச் சின்­னங்­கள் தவ­றா­கப் பயன்­ப­டுத்­தப்­படும் செயல்­கள் பற்றி புகார் அளிக்க இணை­யத் தளம் ஒன்றை அமைக்­க­லாம் என்று பரிந்­து­ரைக்கப்பட்டது.

தேசிய மர­பு­ரி­மைச் சின்­னங்­களை மின்னலக்கப் பயன்பாடு உட்பட முறையாகப் பயன்படுத்துவது பற்றிய முழுமையான வழிகாட்டியை வெளியிடவும் அமைச்சு பரிசீலித்து வருகிறது.