அடுத்த ஆண்டிலிருந்து பொறியியல் மாணவர்களுக்கு எரிசக்தி துறை உபகாரச் சம்பளத்தை தூய எரிசக்தி நிறுவனங்கள் வழங்கும். இந்த உபகாரச் சம்பளத்தை இந்நிறுவனங்கள் வழங்குவது இதுவே முதல்முறை.
உபகாரச் சம்பளம் பெறும் மாணவர்கள் பலதுறைத் தொழிற்கல்லூரி அல்லது தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் தங்கள் கல்வி யை முடித்ததும் தூய எரிசக்தி நிறுவனங்களில் வேலையில் அமர்த்தப்படுவர்.
எரிசக்தி துறை உபகாரச்
சம்பளம் 2014ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு சிங்கப்பூர் பவர், சினோகோ எனர்ஜி, எரிசக்தி சந்தை ஆணையம் ஆகியவையும் நிதி வழங்கியுள்ளன.
இந்த உபகாரச் சம்பளத் திட்டத்தில் தூய எரிசக்தி நிறுவனங்களும் இணைந்துகொள்வதால் அத்துறையில் போதுமான
மனிதவளம் இருப்பது உறுதிசெய்யப்படும்.
அதுமட்டுமல்லாது, தூய எரிசக்தி முறைக்கு மாற சிங்கப்பூர் கொண்டிருக்கும் இலக்கை அடையத் தேவையான ஆற்றல்மிக்க ஊழியரணியை உருவாக்க பாதை வகுக்கப்படும்.
"புதிய அணுகுமுறை வாய்ப்பு களை அதிகரிக்கும். தூய எரிசக்தி துறையில் சேர்ந்து சிறப்பாகச் செயல்படத் தயாராக இருக்கும் ஆற்றல்மிக்க ஊழியரணி கிடைக்கும்," என்று
வர்த்தக, தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங் நேற்று தெரிவித்தார்.
சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வாரத்தின் இளையர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியபோது இத்தகவல்களை வெளியிட்டார்.
குறைந்த கரிம வளங்களி
லிருந்து ஏறத்தாழ 30 விழுக்காடு மின்சாரத்தை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாக சிங்கப்பூர் அண்மையில் தெரிவித்திருந்தது.

