முரசொலி
சிங்கப்பூர் இயற்கை வளங்கள் இல்லாத சிறிய நாடு. பரப்பளவில் சிறிய நாடாக இருந்தாலும் நாட்டில் மக்களுக்கு உரிமை-உடைமை இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் அது தன் மக்கள் அனைவருக்கும் கட்டுப்பாடிகக்கூடிய வகையில் சொந்த வீடுகளை மானியத்துடன் உருவாக்கித் தந்து உலகச் சாதனையைப் படைத்து உள்ளது.
சிங்கப்பூரர்களின் மிக முக்கியமான, அடிப்படை ன, ஆதாரமான, கண்கூடான சொத்தாக வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் திகழ்கின்றன.
மக்களின் விருப்பங்களுக்கு ஏற்பவும் காலத்திற்குப் பொருத்தமாகவும் அப்போதைக்கு அப்போது தொடர்ந்து வீட்டு வசதிகள் மேம்படுத்தப்பட்டும் வருகின்றன. சிங்கப்பூரின் வெற்றிகரமான பொது வீடமைப்புக் கொள்கை இதற்கு வகை செய்கிறது.
எல்லாருக்கும் வீடு என்பதே அரசாங்கத்தின் இலக்கு. இதை மானியங்கள் மூலம் அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது.
பொது பணத்தைக்கொண்டு கட்டப்படுகின்ற வீடுகளின் அடிப்படை நோக்கம் மக்கள் உலகத் தர வசதிகளுடன் சொந்த வீட்டில் குடியிருக்க வகை செய்வதுதான்.
வீடுகளின் மதிப்புக் கூட வேண்டும்; பொது வீடுகளின் மதிப்பு, போட்டித்திறன்மிக்கதாக தொடர்ந்து மேம்பட்டுவரவேண்டும்; அதன்மூலம் நாட்டில் மக்களின் தேசிய உடைமையைத் தொடர்ந்து வலுவாக்கி வரவேண்டும் என்ற நோக்கத்துடன் பொது வீடுகளைக் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு விற்பதற்கும் அரசாங்கம் அனுமதிக்கிறது. இதற்காகத்தான் மறுவிற்பனை சந்தை செயல்படுகிறது.
ஆனாலும் மக்களுக்குக் கட்டுப்படிகக்கூடிய விலையில் வீடுகள் கிடைக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்த இடம்பெறுகின்ற அரசாங்க மானி யங்கள், வீட்டை பணத்துக்காக விற்று காசாக்கும் ஒரு வழிக உருவாகிவிடக்கூடாது என்பது கட்டாயமானது.
இந்த ஆண்டில் குறைந்தபட்சம் $1 மில்லியன் விலையுள்ள வீவக வீடுகள் சாதனை அளவில் கைமாறி இருக்கின்றன. முதல் ஒன்பது மாத காலத்தில் அத்தகைய 174 வீடுகள் விற்பனைகி உள்ளன. சென்ற ஆண்டு முழுவதற்கும் இந்த எண்ணிக்கை 82 ஆகத்தான் இருந்தது.
இந்த நிலவரம், வீவக வீடுகள் அதிர்ஷ்ட தேவதை களாக பார்க்கப்படும் ஒரு சூழலை உருவாக்கி உள்ளது. அதேவேளையில், நீண்டகால போக்கில் வீட்டு விலை தங்களுக்கு எட்டாத அளவுக்குப் போய்விடுமா என்று கவலைப்படும் சிங்கப்பூரர்களைப் பொறுத்தவரை, இந்த $1 மில்லியன் நிலவரம் ஓரள வுக்குக் கவலையை ஏற்படுத்தி இருப்பது என்னவோ உண்மைதான்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கு மறு விற்பனை சந்தையில் கிராக்கி அதிகமாகவே இருந்து வருகிறது. அது பொதுவான ஒரு நிலவரம். ஆனால் பொது வீடுகள் என்று வரும்போது அவற்றின் விலைகளை இத்தகைய மில்லியன் வெள்ளி அளவை அடிப்படைகக்கொண்டு தீர்மானிக்கும் ஒரு போக்கு இடம்பெற்றுவிடக்கூடாது.
எங்குமே ஒரு வீட்டின் அமைவிடம் அதன் விலையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் மிக முக்கியமான நகர்ப் பகுதியில், பிரதான பகுதியில் அமையும் வீடுகளைப் பற்றிச் சொல்ல வேண்டிய தேவையில்லை. நாட்டின் பிரதான இடங் களில், மைய இடங்களில் எதிர்கால வீவக வீடுகளை கட்டுவதற்கான திட்டங்களை அரசாங்கம் அண்மையில் அறிவித்தது. அத்தகைய வீடுகளுக்குத் தேவை அதிகமாக இருக்கும் என்பது நிச்சயம் என்பதால் கூடுமானவரை அவை கட்டுப்படியாகக்கூடிய விலையில் கிடைக்க வழி இருக்க வேண்டும்.
பணம் ஈட்டும் நோக்கத்தில் அந்த வீடுகள் வாங்கப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். இவற்றைக் கருத்தில்கொண்டுதான் புதிய ஒரு முன்மாதிரியை அரசாங்கம் உருவாக்கி இருக்கிறது. இந்த ஏற்பாடு, அத்தகைய வீடுகளின் விலைகள் கட்டுப்படிகக் கூடியதாக இருக்கும் என்பதையும் எல்லாரையும் உள்ளடக்கும் வகையில் அவை திகழும் என்பதையும் உறுதிப்படுத்தும்.
இதைச் செய்வதற்காக அரசாங்கம் பல புதிய கட்டுப்பாடுகளை விதிக்க இருக்கிறது.
பிரதான, மைய இடங்களில் வருங்காலத்தில் கட்டப்படும் வீவக வீடுகளின் குறைந்தபட்ச அனு போகக் காலம் 10 ஆண்டுகளாக இருக்கும்.
அந்த வீடுகளைக் கட்டுவதற்கு அரசாங்கம் செலவிட்டு இருக்கும் கூடுதலான மானியங்களை, அந்த வீடுகளை விற்கும்போது கிடைக்கும் லாபத்தில் இருந்து திருப்பி அரசுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்பவை நிபந்தனைகள்.
பொது வீடுகள் அவற்றை விற்று அதன்மூலம் சொந்த லாபம் ஈட்டுவதற்காக அல்ல; சிங்கப்பூரர்கள், அவர்கள் எந்த பகுதியில்-அதாவது பிரதான பகுதியில் வசித்தாலும் சரி- வேறு இடத்தில் வசித்தா லும் சரி அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய மானி யங்கள் நியமான முறையில் இருக்கின்றன என்பதை எல்லாம் அவை உறுதிப்படுத்தும்.
குறைந்தபட்ச அனுபோகக் காலம் 10 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதால் வீடுகளை விற்பதன் தொடர்பிலான உடனடி ஊக பேர சிந்தனைகளுக்கும் இடமில்லாமல் போய்விடும். அத்தகைய வீடுகளை வாங்குவோருக்கான பிரதான நோக்கம் குடியிருப்பது தான் என்ற ஓர் எண்ணத்தையும் புதிய கட்டுப்பாடுகள் ஏற்படுத்தும் என்று நம்பலாம்.
இப்படிப்பட்ட ஒரு நோக்கம் வீடு வாங்கு வோரிடையே இருந்தால்தான், வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் சமூகக் கடமை நிறைவேற வழி ஏற்படும்.
தனிர் வீடுகள் வேறு, வீவக வீடுகள் வேறு. தனிர் வீடுகளுக்கு அரசு மானியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வீவக வீடுகள் குறிப்பிட்ட நோக்கங்களைக் கொண்டவை.
பொது வீட்டு வசதியைப் பொறுத்தவரை, வீட்டு உரிமைளர்களும் வீடுகளை வாங்குவோரும் ஓர் உண்மை நிலவரத்தை கவனத்தில்கொள்ள வேண்டும்.
பிரதான, மத்திய பகுதிகளில் அல்லாமல் வேறு எந்தவோர் இடத்திலும் அமைந்திருக்கும் எந்தவொரு வீவக வீடும் மதிப்பிலோ, வசதியிலோ குறைந்தது அல்ல; ஒரு வீட்டின் அமைவிடம் முக்கியமானது என்றாலும்கூட அதுவே எல்லாம் என்று ஆகிவிடாது.
நல்ல வசதிகள், நல்ல போக்குவரத்து தொடர்புகள், குடியிருப்புப் பேட்டைகளுக்கு இடைப்பட்ட நெருக் கங்கள் ஆகிய அம்சங்களோடு வீவக ஒவ்வொரு வருக்கும் அவரவர் விருப்பத்திற்கேற்ப குடியிருப்பு வசதிகளைச் செய்து தந்து வருகிறது;
பிரதான, மத்திய வட்டாரத்திற்கு வெளியே அமைந்திருக்கும் பல பேட்டைகளில் வசிக்கும் மக்கள் தாங்கள் அனுபவிக்கும் வசதிகள், வாழ்க்கைத் தரம் எல்லாம் மனநிறைவாக இருப்பதை அன்றாட வாழ்வில் கண்டுகொண்டு வருகிறார்கள் என்பதே உண்மை.