கொவிட்-19: மேலும் 16 பேர் பலி; 4,248 பேருக்குத் தொற்று

சிங்­கப்­பூ­ரில் 44 முதல் 90 வய­திற்­குட்­பட்ட மேலும் 16 பேர் கொவிட்-19 தொற்று கார­ண­மாக வெள்­ளிக்­கி­ழமை மாண்டுவிட்­ட­னர். அவர்­கள் அனை­வர்க்­கும் வேறு உடல்­ந­லக் குறை­பா­டு­களும் இருந்­த­தா­கச் சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

மாண்­டு­விட்ட 44 வய­துக்­காரர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர் என்று அமைச்சு தெரி­வித்­தது.

புதி­தாக மர­ண­ம­டை­ந்த­வர்­களை­யும் சேர்த்து மர­ண­முற்­றோர் மொத்த எண்­ணிக்கை 380 ஆகக் கூடிவிட்டது.

தொடர்ந்து 40வது நாளாக கொரோனா தொற்­றால் மர­ணம் நிகழ்ந்­துள்­ளது. வெள்­ளிக்­கி­ழமை புதி­தாக 4,248 பேரை கொரோனா தொற்றியதாக அமைச்சு உறு­திப்­படுத்­தி­யது.

புதி­தாக கிருமி தொற்­றி­யோரில் சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர்கள் 3,710 பேரும் வெளி­நாட்டு ஊழி­யர் விடு­தி­க­ளைச் சேர்ந்த 536 பேரும் வெளி­நாட்­டி­லி­ருந்து வந்த இருவரும் அடங்­கு­வர்.

சமூ­கத்தொற்­றுக்கு ஆளா­ன­வர்­களில் 559 பேருக்கு வயது 60க்கும் மேல் என்­றும் அமைச்சு குறிப்­பிட்­டது. சிங்­கப்­பூ­ரில் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பு 192,099 ஆக இருக்கிறது.

பொது மருத்­து­வ­மனைகளில் 257 நோயா­ளி­கள் உயிர்­வாயு உதவி­யு­டன் சிகிச்சை பெற்று வரு­கி­றார்­கள். தீவிர சிகிச்சை பிரி­வில் 80 பேர் அணுக்­க­மா­கக் கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர். 59 பேருக்குச் செயற்கை சுவாச சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!