கொவிட்-19: மேலும் 16 பேர் பலி; 4,248 பேருக்குத் தொற்று

கொவிட்-19: மேலும் 16 பேர் பலி; 4,248 பேருக்குத் தொற்று

1 mins read
82d8fa9f-9503-4dba-ab93-cb0d18b7f7db
-

சிங்­கப்­பூ­ரில் 44 முதல் 90 வய­திற்­குட்­பட்ட மேலும் 16 பேர் கொவிட்-19 தொற்று கார­ண­மாக வெள்­ளிக்­கி­ழமை மாண்டுவிட்­ட­னர். அவர்­கள் அனை­வர்க்­கும் வேறு உடல்­ந­லக் குறை­பா­டு­களும் இருந்­த­தா­கச் சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

மாண்­டு­விட்ட 44 வய­துக்­காரர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர் என்று அமைச்சு தெரி­வித்­தது.

புதி­தாக மர­ண­ம­டை­ந்த­வர்­களை­யும் சேர்த்து மர­ண­முற்­றோர் மொத்த எண்­ணிக்கை 380 ஆகக் கூடிவிட்டது.

தொடர்ந்து 40வது நாளாக கொரோனா தொற்­றால் மர­ணம் நிகழ்ந்­துள்­ளது. வெள்­ளிக்­கி­ழமை புதி­தாக 4,248 பேரை கொரோனா தொற்றியதாக அமைச்சு உறு­திப்­படுத்­தி­யது.

புதி­தாக கிருமி தொற்­றி­யோரில் சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர்கள் 3,710 பேரும் வெளி­நாட்டு ஊழி­யர் விடு­தி­க­ளைச் சேர்ந்த 536 பேரும் வெளி­நாட்­டி­லி­ருந்து வந்த இருவரும் அடங்­கு­வர்.

சமூ­கத்தொற்­றுக்கு ஆளா­ன­வர்­களில் 559 பேருக்கு வயது 60க்கும் மேல் என்­றும் அமைச்சு குறிப்­பிட்­டது. சிங்­கப்­பூ­ரில் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பு 192,099 ஆக இருக்கிறது.

பொது மருத்­து­வ­மனைகளில் 257 நோயா­ளி­கள் உயிர்­வாயு உதவி­யு­டன் சிகிச்சை பெற்று வரு­கி­றார்­கள். தீவிர சிகிச்சை பிரி­வில் 80 பேர் அணுக்­க­மா­கக் கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர். 59 பேருக்குச் செயற்கை சுவாச சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது.