ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ள உதவும் திட்டம் 3 துறைகளில் அமலாகும்

கட்­டு­மா­னம், கப்­பல் பட்­டறை, பத­னீட்­டுத் துறை­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­கள் எதிர்­நோக்­கும் ஊழி­யர் பற்­றாக்­கு­றை­யைப் போக்­க­வும் ஒர்க்­பர்­மிட் ஊழி­யர்­களைத் தொடர்ந்து வேலை­யில் வைத்­துக்­கொள்ள ஆத­ரவு அளிக்­க­வும் உத­வும் புதிய நட­வ­டிக்­கை­கள் இடம்­பெற இருக்­கின்­றன.

சிங்­கப்­பூ­ரில் அனு­ப­வ­மிக்க ஊழி­யர்­க­ளைக் கட்­டு­மா­னத் துறை தொடர்ந்து வேலை­யில் வைத்­துக்­கொள்ள உத­வும் திட்­டம், கப்­பல் பட்­டறை, பத­னீட்­டுத் துறை­களுக்கும் நீட்­டிக்­கப்­படும் என்று மனி­த­வள அமைச்சு நேற்று அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தது.

வேலை நிய­மன அனு­மதி முடிந்து­விட்ட ஊழி­யர்­கள் விரும்­பி­னால் தொடர்ந்து சிங்­கப்­பூ­ரில் புதிய வேலை­க­ளைப் பெற இந்­தத் திட்­டம் அனு­ம­திக்­கிறது.

சிங்­கப்­பூர் கடல் தொழில்­து­றை­கள் சங்­கம், பத­னீட்­டுத் தொழில்­துறை சங்­கம் ஆகி­ய­வற்­று­டன் சேர்ந்து செயல்­பட்டு ஊழி­யர்­க­ளைத் தக்­க­வைத்­துக்கொள்­ளும் திட்டத் தைக் கப்­பல் பட்­டறைத் துறைக்கும் பத­னீட்­டுத் துறைக்­கும் அமைச்சு விரி­வு­ப­டுத்­து­கிறது.

இந்­தச் சங்­கங்­கள், தங்­கள் திட்­டங்­கள் பற்­றிய மேல் விவ­ரங்­களை அவை தயா­ரா­ன­தும் வெளி­யி­டும் என்­றும் அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது.

இன்­னும் ஓரிரு மாதங்­களில் இந்­தத் திட்­டம் நடப்­புக்கு வரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக இந்தச் சங்­கங்­க­ளைச் சேர்ந்த பிர­தி­நி­தி­கள் கூறி­ உள்ளனர்.

ஊழி­யர்­களைத் தக்­க­வைத்­துக் கொள்­ளும் திட்­டம் கட்­டு­மா­னத் துறை­யில் செப்­டம்­பர் 1ஆம் தேதி நடப்­புக்கு வந்­தது. அது இது­நாள் வரை 52 நிறு­வ­னங்­க­ளுக்கு நன்மை அளித்து இருக்­கிறது.

அந்­தத் திட்­டம் அடுத்த ஆண்டு பிப்­ர­வரி 28 வரை நடப்­பில் இருக்­கும். பிறகு அது பற்றி மறு­ப­ரி­சீலனை செய்­யப்­படும்.

இப்­போது முத­லாளி ஒரு­வர், ஒர்க்­பர்­மிட் ஊழி­யர் ஒரு­வரை, அவ­ரு­டைய ஒர்க்­பர்­மிட் காலா­வதி ஆவ­தற்கு முன்­பாக 21 நாள் முதல் 40 நாட்­க­ளுக்­குள் அந்த ஊழி­ய­ரின் முத­லா­ளி­யின் சம்­ம­தத்­தைப் பெறா­மலேயே வேலை­யில் அமர்த்­திக் கொள்­ள­லாம்.

இனி­மேல் ஒர்க்­பர்­மிட் ஊழி­யர்­கள் தங்­க­ளுக்­கான வேலை அனு­மதி காலா­வ­தி­யா­கும் வரை, இப்­போ­தைய முத­லா­ளி­க­ளி­டம் தொடர்ந்து வேலை பார்க்­க­லாம்.

காலா­வ­தி­யா­ன­தும் ஊழி­யர், முத­லாளி இரு­வ­ருக்­கும் இடைப்­பட்ட பரஸ்­பர இணக்­கத்­தின் பேரில் 30 நாட்­க­ளுக்கு அந்த ஊழி­யர் தொடர்ந்து அதே நிறு­வ­னத்­தில் வேலை பார்க்­க­லாம்.

அந்த 30 நாளில் அவர் வேறு வேலை­யைத் தேட­லாம். அவருடைய இப்­போ­தைய முத­லா­ளி­யின் அனு­மதி அதற்­குத் தேவை­யில்லை.

அந்த ஊழி­யர் வேறு வேலையைப் பெற தொழில்­து­றைச் சங்­கங்­கள் உத­வும் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!