வாழையிலை வியாபாரத்தில் வாட்டம்

வாழையிலை வியாபாரத்தில் வாட்டம்

1 mins read
1d4a9b23-3811-4291-9518-fc1eee7a01a3
-

இந்­தி­யப் பாரம்­ப­ரி­யத்­தில் விழா, விருந்து, சடங்­கு­களில் முதல் இடம் பிடிப்­பது வாழை­யிலை. சிங்­கப்­பூ­ருக்கு வாழை இலை­கள் குறிப்­பாக மலே­சி­யா­வின் ஜோகூர் பாரு­வி­லி­ருந்து வரு­கிறது. தேக்கா சந்­தை­யிலே இரண்டு மொத்த வாழை இலை கடை­கள் உள்­ளன.

"பொது­வாக பண்­டிகை காலங்­க­ளில்­தான் வியா­பா­ரம் சூடு பிடிக்­கும். ஆனால் கிரு­மித்­தொற்று தொடங்­கி­ய­தி­லி­ருந்து, மலே­சி­யா­வி­லி­ருந்து வாழை­யிலை வரு­வது குறைந்­து­விட்­டது. தேவை­யி­ருந்­தா­லும் இலை போத­வில்லை," என்­றார் சாமி வாழை­யிலை கடை உரி­மை­யா­ளர் திரு கோவிந்­த­சாமி.

"இந்த ஆண்டு தீபா­வ­ளிக்கு ஒவ்­வொரு நாளும் சுமார் 15 கட்­டு­கள் மட்­டுமே வரு­கின்­றன, என்றார் அவர்.

மேலும், கொவிட்-19 பாது­காப்பு நட­வ­டிக்கை கார­ண­மாக சந்தையின் உள்­ளுக்­குள் இருக்­கும் சில கடை­கள் பாதிக்­கப்­ப­டு­கின்­றன. இறைச்சி வாங்­கு­வோர்­கூட இந்தப் பக்­கம் வரு­வ­தில்லை.

"ஒரு நாளைக்கு இலை­களை விற்று $40 கிடைப்­பதே பெரிய விஷ­யம். முன்­னரோ ஒரு­நா­ளில் எப்­ப­டி­யும் $80 ஈட்­டி­வி­ட­லாம்," என்­றார் மற்­றொரு வாழை­யிலை வியா­பா­ரி­யான திரு­மதி தம்­பிய­ய்யா தனக்­கொடி.