சிங்கப்பூரின் முதல் நவதானிய அலங்காரம்

சிங்கப்பூரின் முதல் நவதானிய அலங்காரம்

2 mins read
79347b5e-4e52-4a3f-9cb9-934923e7582d
நவதானியங்களைக் கொண்டு செய்யப்பட்ட சண்முகரூபனின் மயில் வடிவ அலங்காரம், ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்திலுள்ள மாரியம்மன் திருவுருவத்திற்குப் பின்னால் வைக்கப்பட்டது. படங்கள்: சண்முகரூபன் -
multi-img1 of 2

கி. ஜனார்த்­த­னன்

மலர்­கள் என்­றாலே சண்­மு­க­ரூ­ப­னுக்கு மகிழ்ச்சி. தெய்­வத் திரு­வு­ரு­வங்­க­ளுக்கு மலர் அலங்­கா­ரம் செய்துவரும் சண்­மு­க­ரூ­பன், சிங்­கப்­பூ­ரின் முதல் நவ­தான்ய அலங்­கா­ரத்­தை­யும் வெற்­றி­க­ர­மா­கச் செய்­துள்­ளார்.

நெல், கோதுமை, பாசிப்­ப­யிறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கடலை ஆகி­ய­வையே நவ­தா­னி­யங்­கள் ஆகும்.

தீமி­தித் திரு­வி­ழா­வுக்­கான பெரி­யாச்சி பூஜை, ரத அலங்­கா­ரம் போன்­ற­வற்­றுக்கு ஆல­யத் தொண்­டூ­ழி­யர்­க­ளின் உத­வி­யு­டன் அலங்­கா­ரத்தை வடி­வ­மைத்­துத் தயா­ரித்த ரூபன், இந்த வாய்ப்­பைத் தமக்­குக் கிடைத்த வர­மா­கக் கரு­து­வ­தா­கக் கூறி­னார்.

"சந்­நிதி அலங்­கா­ரத்­தி­லும் ஈடு­பட்­டேன். ஆயி­னும், பொது­மக்­கள் நேர­டி­யாக சந்­நிதிக்­குள் நுழைய முடி­யாது. எனவே ஆல­யத் தொண்­டூ­ழி­யர்­க­ளின் உத­வி­யு­டன் அள­வு­களை அறிந்து மலர் அலங்­கா­ரங்­களைத் தயா­ரித்­தேன்," என்று 'நந்தி' மலர் மொத்த வியா­பா­ரத்தை மூன்று ஆண்­டு­களாக வீட்­டி­லி­ருந்து நடத்­தி­வ­ரும் ரூபன் கூறி­னார்.

இந்­தி­யா­வில் நவ­தா­னிய அலங்­கா­ரம் செய்­யும் திற­னைக் கற்­றுக்­கொண்ட ரூபன், இரண்டு வாரங்­க­ளுக்கு முன்­ன­தாக அந்த அலங்­கா­ரத்தை ஸ்ரீ மாரி­யம்­மன் ஆல­யத்­தின் மூலஸ்­தா­னத்­தில் சமர்ப்­பித்­தார். மயில் வடி­வத்­தி­லான அந்த அலங்­கா­ரம், மாரி­யம்­மன் திரு­வு­ரு­வத்­திற்­குப் பின்னே வைக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் முதல்­முறை இத்­த­கைய நவ­தா­னிய அலங்­கா­ரம் செய்­யப்­பட்­ட­தாக ரூபன் தெரி­வித்­தார்.

கிட்­டத்­தட்ட 7 அடி அகல, 5 அடி நீளத்­தில் மயில் பட உரு­வத்­தைக் கொண்ட நவ­தா­னிய அலங்­கா­ரத்­தைச் செய்­யத் தொடங்­கி­ய­தாகத் தெரிவித்த ரூபன், இதை முடிப்­ப­தற்கு 36 மணி நேரம் பிடித்­த­தா­கக் கூறி­னார்.

மயி­லின் ஒவ்­வொரு பாகத்­திற்­கும் தானி­யங்­கள் ஒவ்­வொன்­றாக ஒட்­டப்­ப­ட­வேண்­டும்.

சொந்த செல­வி­லும் தயங்­காது அலங்­கா­ரங்­க­ளைத் தயா­ரிக்­கி­றார் ரூபன். தமது சேவைக்கு நிதி­யா­த­ரவு அளிக்க பலர் சுய­மாக முன்­வ­ரு­வ­தா­கக் கூறிய இந்த இளை­யர், கலை­ந­யத்­து­டன் செய்­யப்­படும் தெய்­வீக அலங்­கா­ரங்­க­ளுக்­காக பல கைகள் சேர்­வ­தா­கக் கூறி­னார்.

"நண்­பர்­கள், உற­வி­னர்­கள் எனப் பணத்தை எதிர்­பார்க்­கா­மல் பல­ரும் முன்­வந்து சேவை­யாற்­று­கின்­ற­னர். பென்­சன் என்ற நண்­பரை இங்கு நான் குறிப்­பிட்­டுச் சொல்ல கட­மைப்­பட்­டுள்­ளேன்," என்று அவர் கூறி­னார்.

ரூபன் இறைப் பற்­றும் கலா­சா­ரப் பற்­றும் மிக்­க­வர் என்று கூறிய அவர் நண்­பர் பென்­சன் மைக்­கல், 21, அவ­ரது திற­மை­யைக் கண்டு தமக்­கும் ஆர்­வம் கூடி­ய­தாகத் தெரி­வித்­தார்.

"பொது­வாக ஆல­யங்­க­ளி­லும் பூஜை அறை­யி­லும் மலர் அலங்­கா­ரங்­க­ளைப் பார்ப்­பது எனக்­குப் பிடித்­த­மான ஒன்று. ரூப­னுக்­குப் பிடித்த பல அம்­சங்­கள் எனக்­கும் பிடித்­தி­ருப்­ப­தால் நல்ல நண்­பர்­கள் ஆனோம். அந்த முறை­யில் அவ­ரது அலங்­கா­ரப் பணி­க­ளுக்கு நான் உதவி செய்து வரு­கி­றேன்," என்று பென்­சன் கூறி­னார்.

மெல்ல மெல்­லத் தலை­யெ­டுத்­து­வ­ரும் பூக்­கடை வியா­பா­ரத்தை நினைத்து மகிழ்­வ­தா­கக் கூறும் ரூபன், அடுத்­த­டுத்த திரு­வி­ழாக்­க­ளின்­போது வித்­தி­யா­ச­மான, கலை­ந­யம் கொண்ட வகை­யில் தமது இறைத்­தொண்டை ஆற்ற விரும்­பு­கி­றார்.

"தீபா­வ­ளிக்­கான முன்­ப­தி­வு­களை ஏற்­றுக்­கொண்­டுள்­ளோம். ஆல­யங்­க­ளி­லி­ருந்­தும் வீடு­க­ளி­லி­ருந்­தும் இந்த முன்­ப­தி­வு­கள் வந்­துள்­ளன. கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லால் முன்­ப­தி­வு­கள் வழக்­கத்­தை­விட குறைந்­தி­ருந்­தா­லும் வியா­பா­ரம் இச்­ச­ம­யத்­தில் திருப்­தி­க­ர­மாக நடக்­கிறது," என்று அவர் கூறி­னார்.