 பெற்றோர் மணவிலக்கு; பிள்ளைகளுக்கு ஆதரவு

1 mins read
41eb9570-27de-4d2b-abeb-6627e83bcff7
-

மாதர் சாச­னத்­தில் பரிந்­து­ரைக்­கப்­படும் புதிய நடை­மு­றை­க­ளின்­படி, பெற்­றோர் மண­வி­லக்­கில் சிக்­கும் பிள்­ளை­க­ளுக்­குக் கூடு­தல் ஆத­ரவு கிடைக்­கும். மண­மு­றி­வுக்­குப்­பின், பிள்­ளை­க­ளைத் தங்­கள் முன்­னாள் கண­வர் அல்­லது மனைவி எளி­தில் சந்­திக்க முடி­யா­மல் தடுப்­ப­வ­ருக்கு எதி­ராக அதி­கா­ரி­க­ளால் நட­வடிக்கை எடுக்க முடி­யும்.

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு இந்­ந­டை­மு­றை­கள் குறித்து நாடா­ளு­மன்­றத்­தில் பரிந்­துரை செய்­தி­ருந்­தது.

ஆலோ­சனை பெறு­வது, குழந்தை வளர்ப்பு தொடர்­பில் தம்­ப­திக்­குத் தக­வல் தெரி­விப்­பது போன்ற வகை­யில் பிள்­ளை­களைச் சந்­திப்­பது தொடர்­பான நடை­மு­றை­கள் நடப்­புக்கு வரும்.

இளம் பிள்­ளை­கள் உள்ள தம்­ப­தி­கள், மண­வி­லக்­குக்கு விண்­ணப்­பிக்­கும் முன் கட்­டாய குழந்தை வளர்ப்பு வகுப்­பில் கலந்து­கொள்ள வேண்­டும் என்ற திட்­ட­மும் பரிந்­துரை செய்­யப்­பட்டுள்­ளது. 2019ஆம் ஆண்­டில் 21 வய­துக்­குக் குறைந்த சுமார் 6,700 பிள்­ளை­க­ளின் பெற்­றோருக்கு மண­மு­றி­வா­னது. பெற்­றோ­ரின் மண­மு­றி­வால் பாதிக்­கப்­பட்ட பிள்­ளை­களில் 2 விழுக்­காட்­டிற்­கும் குறை­வா­ன­வர்­களே ஆத­ரவு பெறும் திட்­டத்­தில் கலந்­து­கொண்­டுள்­ள­னர்.