சட்டவிரோதமாக தகவலைப் பகிர்ந்த முன்னாள் சிறைச்சாலை அதிகாரிகள்மீது குற்றச்சாட்டு

1 mins read
cd07720e-3fdf-44ed-ae55-12c995f15bba
-

தானா மேரா சிறை­யில் உள்ள கைதி ஒருவரி­டம் அங்­கி­ருந்த வேறு இரண்டு கைதி­கள் பற்றி சட்டவிரோ­த­மா­கத் தக­வல்­க­ளைப் பகிர்ந்த இரண்டு முன்­னாள் சிறைச்­சாலை அதி­கா­ரி­கள் மீது நேற்று குற்­றஞ்சாட்­டப்­பட்­டது.

முக­மது ஸுல் ஹெல்மி அப்­துல் லத்­திப், 32, மீது அலு­வல்­முறை ரக­சி­யங்­கள் சட்­டத்­தின் கீழ் மூன்று குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன.

மேலும், முக­மது ஃபஹத்­துல்லா முக­மது நோர்­டின், 37, எனும் முன்­னாள் அதி­காரி மீது அலு­வல்­முறை ரக­சி­யங்­கள் சட்­டத்­தின்கீழ் இரண்டு குற்­றச்­சாட்­டு­களும் கணினி­யின் தவ­றான பயன்­பாட்­டுக்­கான சட்­டத்­தின்கீழ் ஒரு குற்­றச்­சாட்­டும் நீதிமன்றத்தில் சுமத்­தப்­பட்­டன.

கரீம் முக­மது குப்­பாய் கான், 35, எனும் கைதி­யி­டம் தக­வல்­களை அவர்­கள் அளித்­த­தா­கக் கூறப்­பட்­டது. அக்கைதி மீது அலு­வல்­முறை ரக­சி­யங்­கள் சட்­டத்­தின்கீழ் ஆறு குற்­றச்­சாட்­டு­களும் அச்­சு­றுத்­தல் தொடர்­பான ஒரு குற்­றச்­சாட்­டும் சுமத்­தப்­பட்­டன.