தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடலில் விடப்பட்ட அரிய வகை ஆமைகள்

1 mins read
20cf2aaf-43a0-47a6-8361-bcf86b82747f
கடந்த 120 ஆண்டுகளில் 'ஹாக்ஸ்பில்' வகை ஆமைகளின் எண்ணிக்கை 80 விழுக்காட்டுக்கும் மேல் சரிந்துள்ளது. இந்த ஆமை வகை, இயற்கைப் பாதுகாப்புக்கான அனைத்துலகச் சங்கத்தின் சிவப்புப் பட்டியலில் உள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அரிய வகை­யைச் சேர்ந்த, அழியக் கூடிய அபாயத்தில் உள்ள 'ஹாக்ஸ்­பில்' வகை­யைச் சேர்ந்த 85 ஆமைக் குஞ்­சு­கள் நேற்­றுக் காலை­யில் கட­லில் விடப்­பட்­டன.

ஆமைக்­குஞ்­சு­கள் செந்­தோ­சா­வில் உள்ள சிலோசோ கடற்­க­ரை­யில் உள்ள கூட்­டி­லி­ருந்து நேற்று முன்­தி­னம் வெளி­வந்­தன. இவை இயற்­கை­யா­கவே பொரித்தி­ருந்­தன.

விலங்­குக் காப்பக அதி­கா­ரி­கள் அவற்­றைச் சேக­ரித்து, அள­விட்டு அவற்­றின் உடல்­ந­ல­னைச் சோதித்­த­னர். பின்­னர் ஆமைக் குஞ்­சு­களை நேற்­றுக் காலை 6.30 மணிக்கு அவர்­கள் செந்­தோ­சாவை ஒட்­டிய கட­லில் விட்­ட­னர்.

பல­வான் கடற்­க­ரை­யில் குஞ்சு கள் இன்­ன­மும் பொரிக்­காத வேறொரு ஆமைக் கூடும் உள்­ளது. இரண்டு கூடு­களும் கடந்த மாதம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.

தென்­கி­ழக்­கா­சி­யா­வில் 'ஹாக்ஸ்­பில்' ஆமை வகை அழி­யும் அபாயத்­தில் உள்­ள­தா­கக் கூறி­னார் கட­லாமை சூழ­லி­யல் அதி­காரி ருஷன் அப்­துல் ரஹ­மான்.

"நமது கடற்­க­ரை­களில் இந்த ஆமை­கள் முட்­டை­யி­டு­வது ஆறு­த­லாய் உள்­ளது," என்­றார் அவர்.

இந்த ஆமைக் கூடு­கள் கடைசி ­யாக செந்­தோ­சா­வில் 2019ஆம் ஆண்டு கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.