குழாயில் கசிவு; ஐந்து மாடி உயரத்துக்கு பீய்ச்சியடித்த நீர்

குழாயில் கசிவு; ஐந்து மாடி உயரத்துக்கு பீய்ச்சியடித்த நீர்

1 mins read
ff350610-782e-4ce8-b7ff-53fbb4789a40
நீர்க் கசிவு ஐந்து மாடி உயரத்துக்கு பீய்ச்சியடித்ததையும் அதனை தடுக்க மேலே லாரி நிறுத்தப் பட்டதையும் படம் காட்டுகிறது. படம்: லியான்ஹ சாவ்பாவ் -

ஈசூ­னில் உள்ள வீவக புளோக்­கில் தண்­ணீர்க் குழா­யில் கசிவு ஏற்­பட்டு ஐந்து மாடி உய­ரத்­துக்கு பீய்ச்­சி­ய­டித்­தது.

ஈசூன் ஸ்தி­ரீட் 22ல் உள்ள புளோக் 263ல் காலை 6.30 மணிக்கு நீர்க் குழா­யில் கசிவு ஏற்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இது குறித்து தக­வல் கிடைத்­த­தும் அங்கு வந்த பொதுப் பய னீட்டுக் கழகத்தின் ஊழி­யர்­கள் கசிவை நிறுத்­தும் பணி­யில் ஈடு­பட்­ட­னர். பிற்­ப­கல் வரை பணி தொடர்ந்த வேளை­யில் மற்­றொரு கசி­வும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

ஈசூன் குடி­யி­ருப்­பா­ளர்­களில் ஒரு­வ­ரான ரிச்­சர்ட் லிம், 49, நேற்று பிற்­ப­கல் கார்ப்­பேட்­டைக்­குச் சென்­ற­போது தண்­ணீர் பீய்ச்­சி­ய­டிப்­ப­தைக் கண்­ட­தாக தெரி­வித்­தார்.

தண்­ணீர் மேல்­நோக்கி பீய்ச்­சி­ய­டிப்பதைத் தடுக்க பியுபி ஊழி­யர் ஒரு­வர் லாரியை தண்ணீர் கசிந்த இடத்துக்கு மேல் நிறுத்­தி­ய­தாக அவர் சொன்­னார். "தண்­ணீர் அவ்­ வ­ளவு வேக­மாக பீய்ச்­சி­ய­டித்தது ஆச்­ச­ரி­ய­மாக இருந்­தது," என்­றார் அவர். பழு­து­பார்ப்­புக்­காக தண்­ணீர் தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­பட்­டது. இத­னால் இரு வீடு­க­ளுக்கு தண்­ணீர் விநி­யோ­கம் பாதிக்­கப்­பட்­ட­தாக நம்­பப்­ப­டு­கிறது. ஆனால் சம்­ப­வத்­தின்­போது ஒரு வீட்­டில் மட்­டுமே ஆட்­கள் இருந்­த­தாக லியான்ஹ வான்­பாவ் நாளேடு தெரி­வித்­தது.