குழாயில் கசிவு; ஐந்து மாடி உயரத்துக்கு பீய்ச்சியடித்த நீர்

ஈசூ­னில் உள்ள வீவக புளோக்­கில் தண்­ணீர்க் குழா­யில் கசிவு ஏற்­பட்டு ஐந்து மாடி உய­ரத்­துக்கு பீய்ச்­சி­ய­டித்­தது.

ஈசூன் ஸ்தி­ரீட் 22ல் உள்ள புளோக் 263ல் காலை 6.30 மணிக்கு நீர்க் குழா­யில் கசிவு ஏற்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இது குறித்து தக­வல் கிடைத்­த­தும் அங்கு வந்த பொதுப் பய னீட்டுக் கழகத்தின் ஊழி­யர்­கள் கசிவை நிறுத்­தும் பணி­யில் ஈடு­பட்­ட­னர். பிற்­ப­கல் வரை பணி தொடர்ந்த வேளை­யில் மற்­றொரு கசி­வும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

ஈசூன் குடி­யி­ருப்­பா­ளர்­களில் ஒரு­வ­ரான ரிச்­சர்ட் லிம், 49, நேற்று பிற்­ப­கல் கார்ப்­பேட்­டைக்­குச் சென்­ற­போது தண்­ணீர் பீய்ச்­சி­ய­டிப்­ப­தைக் கண்­ட­தாக தெரி­வித்­தார்.

தண்­ணீர் மேல்­நோக்கி பீய்ச்­சி­ய­டிப்பதைத் தடுக்க பியுபி ஊழி­யர் ஒரு­வர் லாரியை தண்ணீர் கசிந்த இடத்துக்கு மேல் நிறுத்­தி­ய­தாக அவர் சொன்­னார். "தண்­ணீர் அவ்­ வ­ளவு வேக­மாக பீய்ச்­சி­ய­டித்தது ஆச்­ச­ரி­ய­மாக இருந்­தது," என்­றார் அவர். பழு­து­பார்ப்­புக்­காக தண்­ணீர் தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­பட்­டது. இத­னால் இரு வீடு­க­ளுக்கு தண்­ணீர் விநி­யோ­கம் பாதிக்­கப்­பட்­ட­தாக நம்­பப்­ப­டு­கிறது. ஆனால் சம்­ப­வத்­தின்­போது ஒரு வீட்­டில் மட்­டுமே ஆட்­கள் இருந்­த­தாக லியான்ஹ வான்­பாவ் நாளேடு தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!