கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு 56 முதல் 95 வயது வரையிலான 14 பேர் இறந்துவிட்டதாக திங்கள்கிழமை அன்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அவர்களில் ஒருவர் மட்டும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. அவருக்கு இதர உடல் நலப் பிரச்சினைகளும் இருந்தன.
திங்கள்கிழமை நிலவரப்படி தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 421க்கு அதிகரித்துள்ளது. அேத நாளில் 2,470 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. இவற்றில் 2,189 உள்ளூர் தொற்றுச் சம்பவங்களாகும். 278 பேர் தங்குவிடுதி களில் பாதிக்கப்பட்டவர்கள். மூவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்.
வாராந்திர தொற்றுவிகிதம் ஞாயிறு 1.12லிருந்து திங்கள்கிழமை 1.05க்கு குறைந்தது. சிங்கப்பூரில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 200,844க்கு கூடியுள்ளது.