சீனப் பொருளியலால் வாய்ப்பு

1 mins read
18d6a570-9032-4303-a196-9761563e23a4
-

சீனா­வின் வலு­வான பொரு­ளி­யல், சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­க­ளுக்கு வளர்ச்சி வாய்ப்­பு­களை வழங்கு வதாக வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் கூறினார்.

சீனப் பொரு­ளி­யல் வலு­வாக மீண்டு வரு­கிறது. உள்­நாட்­டுப் பய­னீட்டை ஊக்­கு­விக்க சீனா கடப்­பாடு தெரி­வித்துள்ளது. பய­னீட்­டா­ளர் செல­வி­னத்தை அதி­க­ரிக்­க­வும் சீனா திட்­ட­மிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­களுக்கு வளர்ச்சி வாய்ப்­பு­களை வழங்­கக்­கூ­டி­ய­தாக இருக்­கும் என்று திரு கான் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர்-சீனா வர்த்­தக முத­லீட்டுக் கருத்­த­ரங்­கம் நான்­கா­வது ஆண்­டாக இந்த ஆண்டு ஷங்காய் நக­ரில் ஆறு நாட்கள் நடக்கிறது.

சிங்­கப்­பூ­ரில் இருந்து ஸூம் வழி­யாக காணொ­ளி­யில் தொடக்க உரை­யாற்­றிய அமைச்­சர் திரு கான், சிங்­கப்­பூ­ரின் தயா­ரிப்­புப் பொருட்­கள் உயர்­த­ரம், பாது­காப்பு, நம்­ப­கத்­தன்­மைக்குப் பெரிதும் பெயர்பெற்­றவை என்­பதைச் சுட்­டிக்­காட்­டி­னார்.