தஞ்சோங் பகார் வட்டாரத்தில் எரிசக்தி சேமிப்புத் திட்டங்கள்

1 mins read
fad15ff6-2d33-4aa3-8a61-18aa0a6b526f
-

தஞ்­சோங் பகா­ர் வட்­டா­ரத்­தில் இருக்­கும் தகு­தி­பெறும் 527 புளோக்­கு­க­ளி­ல் வரும் 2025ஆம் ஆண்­டுக்கு சூரிய சக்­தியை உற்­பத்தி செய்­யும் சூரிய ஒளி மின் தகடுச்­ சாத­னங்­கள் பொருத்­தப் ­படும்.

சாத­னங்­கள் பொருத்­தப்­பட்ட பின்­னர், அந்த புளோக்­கு­களில் உள்ள பொது இடங்­களில் எரி சக்தி பயன்­பாடு நிகர பூஜ்­ஜி­யத்­துக்கு வரும் என்று எதிர்­பார்க்­கப் ­ப­டு­கிறது.

இத்­திட்­டம் எரி­வாயு செய­லாற்­றலை அதி­க­ரிக்­கும் தஞ்­சோங் பகார் நகரமன்­றத்­தின் பத்­தாண்டு பெருந்­திட்­டத்­தின் ஒரு பகு­தி­ யாகும். நகரமன்­றம் இந்த ஆண்டுக்­கான தனது நீடித்த நிலைத்­தன்மை அறிக்­கையை நேற்று வெளி­யிட்­டது. இதில் பத்­தாண்டு பெருந்­திட்­டம் பற்றி தெரி­விக்­கப்­பட்­டது.

மேலும், வரும் 2030க்குள் பொது இடங்­களில் 15% குறை­வான எரி­சக்­தி­யைப் பயன்­ப­டுத்த நக­ர­மன்­றம் திட்­ட­மி­டு­கிறது.

அதற்கு எரி­சக்­தி­யைச் சேமிக்­கும் மின்­தூக்­கி­க­ள் பயன்­ப­டுத்­தப்­படும். அத்­து­டன் அறி­வார்ந்த எல்­இடி விளக்­கு­க­ளைப் பயன்­ படுத்த முடி­யுமா என்­றும் அது சோதித்து வரு­கிறது.

மேலும் கழி­வு­கள் அற்ற நிலையை அடை­யும் முயற்­சி­யி­லும் தஞ்­சோங் பகார் நகரமன்­றம் ஈடு­பட்டு வரு­கிறது. அதற்கு, செடி­கொ­டி­க­ளை­யும் உண­வுக் கழி­வு ­க­ளை­யும் உர­மாக மாற்­று­வது திட்­டமாகும்.