சவால்களை முறியடித்து உச்சம் எட்ட இலக்கு

2 mins read
961f09de-b81a-41a0-aecb-6e59080f568b
காயத்ரி உணவகத்தின் உரிமையாளர் சண்முகம் கணேசனுடன் (அமர்ந்திருப்பவர்), (இடமிருந்து வலம்)அவரது மூத்த மகனும் காயத்ரி உணவகத்தின் இயக்குநருமான ச. மகேந்திரன், ஆக இளைய மகனான ச. கபிலன், இரண்டாவது மகன் ச. விக்னேஸ்வரன்.படம்: திமத்தி டேவிட் -

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

பொது­வாக 16 வயது இளை­யர்­கள் தங்­கள் நண்­பர்­க­ளு­டன் வெளியே செல்­வ­தி­லும் கல்வி கற்­ப­தி­லும் அதிக நேரத்தை செல­வ­ழிப்­பர்.

ஆனால் காயத்ரி உண­வ­கத்­தின் உரி­மை­யா­ள­ரான திரு சண்­மு­கம் கணே­ச­னின் மூத்த மகன் திரு ச. மகேந்­தி­ரன், அந்த இளம் வய­தில் பள்ளி முடிந்­த­தும் நவீன தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்தி எவ்­வாறு கட்­ட­ணம் செலுத்­தும் இயந்­தி­ரத்தை இயக்­கு­வது போன்ற தொழில்­நுட்ப உத்­தி­க­ளைத் தமது ஊழி­யர்­க­ளுக்­குக் கற்­றுத் தந்­தார்.

குடும்­பத் தொழில் என்­ப­தால் காயத்ரி உண­வக நிர்­வா­கத்­தில் அவர் ஈடு­ப­டு­வார் என்ற எதிர்­பார்ப்பு அதி­கம் இருந்­தது.

"தந்­தை­யின் தொழில் கற்­பித்­தல் முறை சற்று வித்­தி­யா­ச­மா­னது. சிக்­க­லான பிரச்­சி­னை­க­ளுக்­குச் சொந்­த­மா­கத் தீர்­வு­கா­ணும்­படி

சொல்­லி­வி­டு­வார்.

"ஆனால் ஆலோ­சனை வழங்­க­வும் தயா­ராக இருப்­பார். உதா­ர­ணத்­திற்கு, எதிர்­பா­ராத வகை­யில் திரு­மண விழா ஒன்­றுக்­குக் கூடு­தல் விருந்­தி­னர்­கள் வர, உட­ன­டி­யாக 200 பேருக்­குச் சாப்­பாடு சமைக்க ஏற்­பாடு செய்­வது போன்ற சூழ்­நி­லையை 17 வய­தி­லேயே எதிர்­கொள்ள வேண்­டி­ய­நிலை எனக்கு ஏற்­பட்­டது," என்று தமக்கு ஏற்­பட்ட அனு­ப­வங்­களை 32 வயது திரு மகேந்­தி­ரன் நினை­வு­கூர்ந்­தார்.

சுமார் ஒன்­றரை ஆண்­டு­கள் 'கேட்­ட­ரிங்' எனப்­படும் உணவு சமைத்து அனுப்­பும் பிரி­வில் பணி­யாற்­றி­விட்டு, தேசிய சேவைக்­குப் பிறகு பிர­சித்தி பெற்ற சுவிட்­சர்­லாந்­தின் லெ ரோஷ் (Les Roches)

பல்­க­லைக்­க­ழ­கத்­தில் ஹோட்­டல் நிர்­வாத்­தில் பட்­ட­யக்­கல்­வி­யை­யும் வர்த்­தக நிர்­வா­கப் பட்­டப்­ப­டிப்பை யும் அவர் மேற்­கொண்­டார்.

சிங்­கப்­பூர் திரும்­பி­ய­தும், 'கேட்­ட­ரிங் சொல்­யூ­ஷன்ஸ்' எனும் நிறு­வ­னத்­தின் பெய­ரில் உணவு சமைத்து, 'பென்டோ செட்'டுகளில் வெளி­நாட்டு ஊழி­யர்­கள், மாண­வர்­கள் போன்­ற­வர்­க­ளுக்கு விநி­யோ­கம் செய்­யும் பொறுப்பை ஏற்று நடத்­தி­னார்.

இதற்­கி­டையே, மளி­கைக் கடை, துப்­பு­ர­வுச் சேவை நிறு­வ­னம் ஆகி­ய­வற்­றை­யும் தொடங்கி அவ­ரது குடும்ப வர்த்­த­கம் விருத்தி அடைந்­தது. அவற்­றி­லும் திரு மகேந்­தி­ர­னின் பங்­க­ளிப்பு இருந்­தது.

திரு மகேந்­தி­ர­னின் இரு தம்­பி­க­ளான 30 வயது ச. விக்­னேஸ்­வ­ரன், 24 வயது ச. கபி­லன் ஆகி­யோ­ரும் குடும்­பத் தொழி­லில் ஈடு­பாடு கொண்­டுள்­ள­னர்.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யின் போது தெலுக் ஆயர் சாலை­யில் இயங்­கிய காயத்ரி உண­வ­கத்தை 'போட்­டம்ஸ் அப்' எனும் பிஸ்ட்ரோ உண­வ­க­மாக மாற்ற இவர்­கள் கொடுத்த ஆலோ­ச­னைக்கு அமோக ஆத­ர­வுக்கு கிடைத்­தது.

அதன் வெற்­றி­யைத் தொடர்ந்து மற்­றொரு கிளை கிள­மெண்டி

பகு­தி­யில் திறக்­கப்­பட்­டது. சகோ

தரர்­கள் மூவ­ரும் பல மின்­னி­லக்க அம்­சங்­க­ளைத் தங்­கள் வர்த்­த­கத்­தில் அறி­மு­கம் செய்­துள்­ள­னர்.

வெவ்­வேறு மென்­பொ­ருள் பயன்­பாடு, விளம்­பர உத்­தி­களில் மின்­னி­லக்க விளம்­ப­ரங்­கள் ஆகி­யவை இவற்­றில் அடங்­கும்.

"கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் நிலை­யற்ற சூழல் ஏற்­பட்­டுள்­ளது. மாற்­றம் ஒன்று மட்­டுமே மாறா­தது. எத்­த­கைய சவா­லை­யும் துணிந்து எதிர்­கொள்­ளும் பக்­கு­வம் எங்­க­ளுக்கு ஏற்­பட உத­விய எங்கள் தந்­தைக்கு நன்­றி­கூ­றக்

கட­மைப்­பட்­டி­ருக்­கி­றோம்," என்­றார் திரு மகேந்­தி­ரன்.

உண­வுத் துறை சார்ந்த தொழில்­கள், வேறு தொழில்­கள் என 11 தொழில்­களை இக்­கு­டும்­பத்­தி­னர் மேற்­கொண்­டுள்­ள­னர். தொடர்ந்து புதிய உச்­சங்­களை எட்டி, புதிய துறைகளி­லும் முத்­திரை பதிக்க சகோ­த­ரர்­கள் கடப்­பாடு கொண்­டுள்­ள­னர்.