நாகேந்திரனின் கருணை மனு நிராகரிப்பு

1 mins read
8dbb95ac-a424-4f14-86f9-739dad2499bb
-

போதைப்­பொ­ருள் கடத்­திய குற்­றத்­துக்­காக மலே­சி­ய­ரான 33 வயது நாகேந்­தி­ரன் கே. தர்­ம­லிங்­கத்­துக்கு விதிக்­கப்­பட்ட மரண தண்­டனை நாளை நிறை­வேற்­றப்­பட இருக்­கிறது.

இந்­நி­லை­யில், நாகேந்­தி­ர­னின் கருணை மனு நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. 2009ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூ­ருக்­குள் போதை­மிகு அபி­னைக் கடத்­திய குற்­றத்­துக்­காக நாகேந்­தி­ரன் கைது செய்­யப்­பட்­டார். அப்­போது அவ­ருக்கு 21 வயது.

மரண தண்­ட­னையை ரத்து செய்ய மனு­தாக்­கல் செய்த நாகேந்­தி­ரன், தமக்கு அறி­வாற்­றல்

குன்­றியநிலை இருப்­ப­தாக அதில் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

33 வயது என்­ற­போ­தி­லும் தமக்கு 18 வயது இளை­ய­ரின் அறி­வாற்­றல் மட்­டுமே இருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.

அறி­வாற்­றல் குன்­றி­யோரை

சிங்­கப்­பூர் சிறைத் துறை தூக்­கி­லி­டு­வ­தில்லை என்று தமது

மனு­வில் அவர் குறிப்­பிட்­டார். இதைச் சிறைத் துறை மறுத்து

விட்­டது. நாகேந்­தி­ர­னுக்கு 18 வயது இளை­ய­ரின் அறி­வாற்­றல் இருப்­ப­தற்கு நம்­ப­க­மான ஆதா­ரம் ஏதும் இல்லை என்று நீதி­பதி சீ கீ ஓன் கூறி­னார்.

அது அவ­ரு­டைய வழக்­க­றி­ஞ­ரான திரு எம். ரவி­யின் கருத்து என்­றார் அவர்.

திரு ரவிக்கு மருத்­துவ நிபு­ணத்­து­வம் இல்லை என்­றும் இம்­மா­தம் 2ஆம் தேதி­யன்று வெறும் 26 நிமி­டங்­க­ளுக்கு நாகேந்­தி­ரனை அவர் சந்­தித்­த­தா­க­வும் நீதி­பதி சீ தெரி­வித்­தார். நாகேந்­தி­ரன் அறி­வாற்­றல் குன்­றி­ய­வர் இல்லை என்று நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

ஆபத்து என்­றும் குற்­றம் என்­றும் தெரிந்தே நாகேந்­தி­ரன் போதைப்­பொ­ருள் கடத்­தி­ய­தாக மேல் முறை­யீடு நீதிமன்­றம் கூறி­யது.