கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியை விலங்குகளுக்குப் போடும் திட்டமில்லை

கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியை விலங்குகளுக்குப் போடும் திட்டமில்லை

1 mins read
0191fa26-0b8a-4a74-b5cc-08550ee3e527
-

சிங்­கப்­பூ­ரின் விலங்­கி­யல் தோட்­டம் அல்­லது வன­வி­லங்­குப் பூங்­காக்­களில் வாழும் மிரு­கங்­களுக்கு இது­வரை கொவிட்-19 தடுப்­பூசி போடப்­ப­ட­வில்லை என்­றும் தற்­போது போடும் திட்­டம் இல்லை என்­றும் மண்­டாய் வன­வி­லங்­குக் குழு­மம் தெரி­வித்­துள்­ளது.

விலங்­கு­க­ளுக்­குத் தடுப்­பூசி எந்த வகை­யில் பாது­காப்­பா­ன­தா­க­வும் பய­னுள்­ள­தா­க­வும் இருக்­கும் என்­பது குறித்து மேலும் ஆராய்­வது முக்­கி­யம் என்­றும் கூறப்­பட்­டது. கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று சிங்­கப்­பூ­ரின் 'நைட் சஃபாரி'யில் உள்ள நான்கு ஆசி­ய­வகை சிங்­கங்­க­ளுக்கு கொவிட்-19 இருப்­பது உறு­தி­யா­கி­யது.

இந்த நான்கு சிங்­கங்­க­ளி­ட­மும் சிங்­கப்­பூர் விலங்­கி­யல் தோட்­டத்­தின் ஆப்­பி­ரிக்க சிங்­கம் ஒன்­றி­ட­மும் மித­மான இரு­மல், தும்­மல், சோர்வு அறி­கு­றி­கள் காணப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது. மண்­டாய் வன­வி­லங்­குக் குழு­மத்­தைச் சேர்ந்த பணி­யா­ளர் ஒரு­வ­ருக்கு கொவிட்-19 இருப்­பது உறு­தி­யானதை அடுத்து சிங்­கங்­க­ளி­ட­மி­ருந்து பெறப்­பட்ட மாதி­ரி­க­ளைக் கொண்டு அவற்­றுக்­கும் கொவிட்-19 இருப்­பது உறு­தி­செய்­யப்­பட்­டது.