கொவிட்-19: தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளியேறிய 4 வயது சிறுவன்

கொவிட்-19: தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளியேறிய 4 வயது சிறுவன்

1 mins read
e8ca9453-300d-4871-bd02-33b868996e40
-

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட நான்கு வயது சிறு­வ­னுக்கு அத­னால் அரிய வகை அழற்சி நோய் ஏற்­பட்­டுள்­ளது. இத­னால் மருத்­து­வ­ம­னை­யின் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அச்­சிறு­வன் ஒரு வாரத்­திற்கு மேல் தங்க வேண்­டி­யி­ருந்­தது.

இதை­ய­டுத்து, கேகே மக­ளிர், சிறார் மருத்­து­வ­ம­னை­யின் தீவிர சிகிச்­சைப் பிரி­வி­லி­ருந்து உயர்­கவனிப்பு படுக்­கைப் பிரி­வுக்­குச் சிறு­வன் நேற்று முன்­தி­னம் மாற்­றப்­பட்­ட­தாக சிறு­வ­னின் தாயார் திரு­வாட்டி மெரி­லின் கெக­னின்­டின், 39, தெரி­வித்­துள்­ளார்.

இம்­மா­தம் 1ஆம் தேதி­யன்று தொடர் காய்ச்­சல், வாந்தி, குளிர் நடுக்­கம், கடு­மை­யான வயிற்று வலி கார­ணத்­தால் மருத்­து­வ­மனை­யில் சேர்க்­கப்­பட்­டார் அலி ஸஃபிர். உடல் உறுப்­பு­கள் பல­வற்­றைத் தாக்­கக்­கூ­டிய 'எம்­ஐ­எஸ்-சி', சிறு­வனுக்கு இருப்­ப­தா­கக் கண்­ட­றி­யப்­பட்­டது.

இது எத­னால் வரு­கிறது என்­பது இன்­னும் அறி­யப்­ப­ட­வில்லை.

சிறா­ரி­டையே கொவிட்-19 தொடர்­பாக பதி­வா­கி­யுள்ள சுமார் 8,000 சம்­ப­வங்­களில், ஐந்து சிறு­வர்­க­ளுக்கு 'எம்­ஐ­எஸ்-சி' இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக ஏற்­கெ­னவே சுகா­தார மூத்த துணை அமைச்­சர் ஜனில் புதுச்­சேரி கூறி­யி­ருந்­தார்.

தற்­போது சிறி­த­ள­வில் பால் மட்­டுமே அலி உட்­கொண்டு வரு­வ­தாக அவ­ரின் தாயார் தெரி­வித்­தார்.