'வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார அதிகாரிகளின் பங்கு மிக முக்கியம்'

'வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார அதிகாரிகளின் பங்கு மிக முக்கியம்'

1 mins read
b6278dde-e0a1-45f0-a7ea-57b6f64ad217
-

கிரு­மி பர­வும் சூழ்­நி­லை­யில் வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தார அதி­கா­ரி­க­ளின் பங்கு முன்பை விட தற்போது இன்­றி­ய­மை­யாதது என்று மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது கூறி­யுள்­ளார்.

"தொற்­று­நோய் பர­வல், பயங்­க­ர­வா­தம் உள்­ளிட்ட அபா­யங்­களை வர்த்­த­கங்­கள் சந்­திக்க வேண்­டி­யுள்­ளது. இந்­தச் சூழ்­நி­லை­யில் வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தார அதி­கா­ரி­க­ளின் பங்கு மதிப்­பு ­மிக்­கது. "வேலை­யி­டத்­தில் காயம் ஏற்படும் சம்­ப­வங்­க­ளைக் குறைக்­க­வும் கிரு­மிப்­ப­ர­வ­லைத் தடுக்­க­வும் அத்­த­கைய அதி­கா­ரி­களின் பங்கை நிறு­வ­னங்­கள் அங்­கீ­க­ரிக்க வேண்­டும்," என்று தற்­காப்பு மூத்த துணை அமைச்­ச­ரு­மான அமைச்சர் ஸாக்கி கேட்­டுக் கொண்­டார்.

"அதி­கா­ரி­க­ளின் பங்கு அவர் ­க­ளு­டைய பொறுப்பு மட்­டும் அல்ல. ஒரு நிறு­வ­னத்­தின் பொறுப்பே அவர்­க­ளி­டத்­தில் உள்­ளது. அவர்­க­ளுக்குத் தேவை­யான வளங்­களை நிறு­வ­னங்­கள் வழங்க வேண்­டும்," என்று மேலும் அவர் தெரி­வித்­தார். தேவன் நாயர் வேலை நிய­மன, வேலைத் தகுதி கழ­கத்­தின் மாநாடு நேற்று 'ஸூம்' தளத்­தில் நடை­பெற்­றது. மேலும் பேசிய அமைச்­சர் ஸாக்கி முகம்­மது, வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தார அதி­காரிகளுக்கு அர­சாங்­கம் ஆத­ர­வாக இருக்­கும் என்­றார்.