கலை, கலாசாரப் பரிமாற்றம்: சிங்கப்பூர்-பிரான்ஸ் ஆர்வம்

கலை, கலாசாரப் பரிமாற்றம்: சிங்கப்பூர்-பிரான்ஸ் ஆர்வம்

1 mins read
83843d62-2e7f-40fb-ac5b-c7ca679e29ae
-

சிங்­கப்­பூ­ரும் பிரான்­சும் இரு­நாட்­டுக் கலை­ஞர்­கள் மற்­றும் கலைப் பயிற்­று­நர்­க­ளுக்­கி­டை­யி­லான ஒத்­து­ழைப்­பை­யும் பரி­மாற்­றங்­க­ளை­யும் எதிர்­பார்ப்­ப­தாக சிங்­கப்­பூ­ரின் கலா­சார, சமூக, இளை­யர்துறை அமைச்­சர் எட்­வின் டோங் தெரி­வித்­துள்­ளார்.

யுனெஸ்­கோ­வின் 41வது பொது மாநாட்­டில் பங்­கேற்­ப­தற்­காக பாரிஸ் நக­ருக்­குச் சென்ற அவர், பிரான்ஸ் கலா­சா­ரத் துறை அமைச்­சர் திருவாட்டி ரோஸ்­லின் பேக்லாட்­டைச் சந்­தித்­தார். சமூக முன்­னேற்­றத்­திற்­காக கலை­க­ளை­யும் கலா­சா­ரத்­தை­யும் பிரான்ஸ் பயன்­ப­டுத்­தும் விதம் குறித்து சிங்­கப்­பூர் அதி­கம் கற்­றுக்­கொள்ள வேண்டி இருப்­ப­தாக அப்­போது திரு டோங் குறிப்­பிட்­டார்.

மேலும், தென்­கி­ழக்கு ஆசிய மரபு, கலா­சா­ரம் பற்றி அறிந்­து­கொள்ள பிரான்­சுக்கு சிங்­கப்­பூர் தனித்­து­வ­மான ஒரு தளம் என்­றார் அவர்.

தொழில்­நுட்­பம், புத்­தாக்­கம் போன்­ற­வற்­றைப் பயன்­ப­டுத்தி நமது மர­பைக் கட்­டிக்­காப்­ப­தற்கு முன்­னு­ரிமை தரு­வது தொடர்­பாக பிரான்ஸ் அமைச்­ச­ரு­டன் ஆலோ­சனை நடத்­தி­ய­தாக திரு டோங் தமது ஃபேஸ்புக்கில் கூறியுள்­ளார்.