புதன்கிழமை இரவு (நவம்பர் 10) நிலவரப்படி அன்றைய தினம் 3,481 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 3,244 பேர் சமூக அளவிலும் 229 பேர் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளிலும் பாதிக்கப்பட்டவர்கள்.
எஞ்சிய 8 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள். சமூக அளவில் பாதிக்கப்பட்டோரில் 506 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
3,481 என்பது செவ்வாய்க்
கிழமை பதிவான எண்ணிக்கையைக் காட்டிலும் சற்று அதிகம்.
செவ்வாய்க்கிழமை இரவு 3,397 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அன்றைய தினம் கணக்கிடப்பட்ட வாராந்திர கொவிட்-19 தொற்று வளர்ச்சி விகிதம் 0.82 என்பதிலிருந்து 0.88க்கு அதி
கரித்ததாக சுகாதார அமைச்சு கூறியது.
ஒவ்வொரு வாரமும் சமூக அளவில் பதிவாகும் தொற்றுச் சம்பவங்கள் அதற்கு முந்திய வாரத்துடன் ஒப்பிட்டு வளர்ச்சி விகிதம் கணக்கிடப்படுகிறது.
இந்த விகிதம் 1க்கு மேல் இருந்தால் வாராந்திர கொவிட்-19 தொற்று இன்னும் அதிகரித்த வண்ணம் உள்ளது எனப் பொருள்படும். ஆனால் கடந்த எட்டு நாட்களாக தொற்று வளர்ச்சி விகிதம் 1க்குக் கீழ் பதிவாகி வருகிறது.
தொற்று காரணமாக புதன்
கிழமை 17 பேர் உயிரிழந்ததாகவும் அமைச்சு தனது அன்றாட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இவர்கள் 65 வயதுக்கும் 101 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் கொவிட்-19 தொடர்பான இதர உடல்நலக் குறைபாடுகள் காரணமாக இவர்கள் மரண
மடைந்ததாகவும் அது கூறியது.
இவர்களையும் சேர்த்து இங்கு கொவிட்-19 தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 540க்கு அதிகரித்து விட்டது. அதேபோல இங்கு இதுவரை பதிவான தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 227,681 ஆக உள்ளது.
நவம்பர் 9ஆம் தேதி நிலவரப்படி, சிங்கப்பூர் மக்கள்தொகையில் 85 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அமைச்சு நேற்று முன்தினம் தெரிவித்தது.
86 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டனர். 19 விழுக்காட்டினர் கூடுதல் தடுப்பூசி (பூஸ்டர்) போட்டுக்கொண்டனர்.