போதைப்பொருள் கடத்தியவர் வழக்கில் மலேசியாவுக்கு சிங்கப்பூர் பதில்

போதைப்பொருள் கடத்தியதற்காக மரண தண்டனையை எதிர்நோக்கும் மலேசியரான நாகேந்திரன் கே.தர்மலிங்கத்தின் வழக்கு குறித்து பிரதமர் லீ சியன் லூங்கும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் மலேசிய சகாக்களிடம் பதிலளித்துள்ளனர்.

நாகேந்திரனுக்கு சட்டத்தின்கீழ் முழுமையான, உரிய நடைமுறை வழங்கப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறியுள்ளதாக வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 12) தெரிவித்தார்.

நாகேந்திரன் வழக்கில் பரிவு காட்டுமாறு பிரதமர் லீ சியங் லூங்கிடம் மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கேட்டுக்கொண்டுள்ளதாக மலேசிய ஊடகங்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இத்தகவலைத் தெரிவித்தார்.

நாகேந்திரனுக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை (நவம்பர் 10) மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.

எனினும், கடந்த செவ்வாய்க்கிழமை அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, விசாரணை அனைத்தும் நிறைவுறும்வரை அவருக்கு மரண தண்டனையை நிறுத்திவைக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!