நேற்று முன்தினம் 2,396 தொற்றுச் சம்பவங்கள்

நேற்று முன்தினம் 2,396 தொற்றுச் சம்பவங்கள்

1 mins read
7c8d0141-e59b-4088-b082-45f3abeb2d25
-

சிங்­கப்­பூ­ரில் நேற்று முன்­தின நில வரப்­படி, 2,396 கொவிட்-19 சம்­ப­வங்­கள் பதி­வா­கின. இது முன்­னைய நாளின் 3,481 சம்­ப­வங்­க­ளை­விட குறைவு என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

மேலும் எட்டு பேர் தொற்­றி­னால் மர­ண­ம­டைந்­துள்­ள­னர். அவர்­கள் 74 வய­துக்­கும் 100 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள்.

இந்த மர­ணங்­க­ளை­யும் சேர்த்து சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொற்­றி­னால் மர­ண­ம­டைந்­த­வர்­கள் எண்­ணிக்கை 548க்கு உயர்ந்­துள்­ளது.

புதிய கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­களில் 2,243 பேர் சமூ­கத்­தில் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள், 136 பேர் வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­விடுதி­யில் வசிப்­ப­வர்­கள். 17 பேர் வெளி­நாட்­டி­லி­ருந்து சிங்­கப்­பூர் திரும்­பி­ய­வர்­கள் என்று அமைச்சின் அறிக்கை கூறியது.

சமூ­கத்­தில் தொற்­றால் பாதிக்­கப்­பட்ட 370 பேர் 60 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­கள்.

சிங்­கப்­பூ­ரில் இது­வரை தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் எண்­ணிக்கை 230,077க்கு உயர்ந்­துள்­ளது.