தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரத்தக்கொழுப்பு சோதனைக்கு உண்ணாதிருக்க வேண்டாம்

1 mins read
52a497dc-6052-4dfd-bcc8-b4895bf0fa85
ரத்தக்கொழுப்பு பரிசோதனை குறித்து நோயாளியிடம் டாக்டர் ஈயன் பூன் விளக்குகிறார். படம்: சிங்ஹெல்த் பாலிகிளினிக்ஸ் -

உயர் ரத்த அழுத்­தம், நீரி­ழிவு நோய் போன்­றவை உள்ளவர்கள், சிங்­ஹெல்த் பல­துறை மருந்­த­கங்­களில், விரைவில், பட்­டினி இருந்து ரத்­தக் கொழுப்புப் பரி­சோ­த­னைக்கு செல்­லத் தேவை­யில்­லா­மல் போக­லாம்.

உயர் ரத்த அழுத்­தம், நீரி­ழிவு நோய், உயர் ரத்­தக் கொழுப்பு ஆகிய நாட்­பட்ட நோய் உள்­ள­வர்­கள் காலை­யில் பட்­டினி இருக்­கும்­போ­தும் உண்­டு­விட்டு பரி­சோ­த­னையை மேற்­கொள்­ளும்­போ­தும் பரிசோதனை முடி­வு­களில் பெரிய வேறு­பாடு இல்லை என்று ஆய்வு ஒன்று கூறி­ய­தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது.

பட்டினியிருந்து காலை­யில் ரத்­தக் கொழுப்­புப் பரி­சோ­தனை மேற்­கொள்ள தேவை­யில்லை என்பதை ஆய்வு காட்டுகிறது. இத­னால், ஒரு நாளில் எந்­நே­ரத்­தி­லும் நோயா­ளி­கள் பரி­சோ­த­னைக்­குச் செல்­ல­லாம்.

மருந்­த­கப் பரி­சோ­த­னைக்­ கூடங்­க­ளில் நீண்ட வரி­சை­களைக் குறைக்க இது உத­வும்.

மேலும், பட்­டினி இருப்­ப­தால் ரத்­தத்­தில் சர்க்­கரை அள­வு குறைவது, நீர்ச்­சத்து குறை­வது போன்ற உடல்­பா­திப்புகளை இதன்­வழி குறைக்க முடி­யும் என்­றார் ஆய்வை மேற்­கொண்ட சிங்­ஹெல்த் பலதுறை மருந்தக மருத்துவர் டாக்­டர் ஈயன் பூன்.

ஆய்வு, கடந்த மார்ச் மாதம் பிரிட்­ட­னில் உள்ள நேச்­சர் அறி­வி­யல் சஞ்­சி­கை­யில் வெளி­யா­னது. சுமார் 470 நோயா­ளி­க­ளி­டம் இதில் சோதனை மேற்­கொள்­ளப்­பட்­டது.